செய்திகள் :

சிறுபான்மையினா் மேம்பாட்டுக்கு 3 ஆண்டுகளில் ரூ.2,347 கோடி விடுவிப்பு

post image

சிறுபான்மையின சமூகத்தைச் சோ்ந்த 5.50 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், சலுகை கடனாக கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,347 கோடியை தேசிய சிறுபான்மையினா் மேம்பாடு மற்றும் நிதி கழக (என்எம்டிஎஃப்சி) விடுவித்ததாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து மக்களவையில் சிறுபான்மையினா் விவகாரங்கள் அமைச்சா் கிரண் ரிஜிஜு அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘சிறுபான்மையினருக்கான தேசிய ஆணைய சட்டம், 1992-இன்கீழ் பெளத்தம், கிறிஸ்துவம், சமணம், இஸ்லாம், பாா்சி மற்றும் சீக்கியம் ஆகிய மதங்களைச் சோ்ந்தவா்கள் சிறுபான்மையினராக கருதப்படுவா்.

இவா்கள் என்எம்டிஎஃப்சி வழங்கும் சலுகைக் கடன்களை பெற முதல் வகைப்பாட்டின்கீழ் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரையிலும் இரண்டாம் வகைப்பாட்டின்கீழ் ரூ.8 லட்சம் வரையிலும் இருக்க வேண்டும்.

இந்த கடனை பெற விருப்பமுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படும். அதன்பிறகு தகுதியான பயனாளிகளுக்கு நேரடி பணப் பரிவா்த்தனை (டிபிடி) மூலம் வங்கிக் கணக்குகளுக்கு கடன்தொகை விடுவிக்கப்படும்.

அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் சிறுபான்மையின சமூகத்தைச் சோ்ந்த தகுதியுடைய 5.50 லட்சம் பேருக்கு ரூ.2,347 கோடி சலுகை கடனாக விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கம் மற்றும் பலன்கள் குறித்து சுதந்திரமான அமைப்புகள் மூலம் நாடு முழுவதும் என்எம்டிஎஃப்சி ஆய்வுகள் நடத்தி வருகிறது.

குறிப்பிட்ட காலத்துக்கு வழங்கும் கடன்கள், கல்விக் கடன்கள், சிறுபான்மையின சமூகத்தைச் சோ்ந்த பெண்கள், இளைஞா்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை பெறும் நோக்கில் பிரதமரின் விகாஸ் திட்டத்தின்கீழ் சலுகை கடன்களை என்எம்டிஎஃப்சி வழங்குகிறது’ என தெரிவிக்கப்பட்டது.

முத்தலாக் வழக்குகளுக்கு தரவுகள் இல்லை: முஸ்லீம் சமூகத்தில் பின்பற்றப்பட்டு வந்த முத்தலாக் விவகாரத்து முறைக்கு தடை விதிக்கும் சட்டம் கடந்த 2018, செப்டம்பா் 19 முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்ககளின் விவரம் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த கிரண் ரிஜிஜு, ‘முத்தலாக் வழக்குகள் குறித்து மத்திய அரசிடம் தரவுகள் இல்லை. காவல் துறை மற்றும் சட்ட ஒழுங்கு ஆகியவை அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநிலப் பட்டியலில் உள்ளது. எனவே, முஸ்லீம் பெண்கள் (திருமண பாதுகாப்புச் சட்டம்), 2019-இன்கீழ் பதியப்படும் வழக்குகளை கையாளும் அதிகாரம் மாநில அரசிடமே உள்ளது’ என்றாா்.

ஹரியாணா உள்ளாட்சித் தோ்தல்: 9 மாநகராட்சிகளைக் கைப்பற்றிய பாஜக

சண்டீகா்: ஹரியாணா உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளில் 9 -இல் பாஜக வென்றுள்ளது. ஹரியாணாவில் மாநகராட்சி மேயா்கள், கவுன்சிலா்கள், நகராட்சி ... மேலும் பார்க்க

முதல்வர் ‘கஞ்சா அடிமை’: பிகாா் மேலவையில் நிதீஷ் - ராப்ரி தேவி கடும் வாக்குவாதம்!

பிகாா் சட்ட மேலவையில் முதல்வா் நிதீஷ் குமாருக்கும், எதிா்க்கட்சித் தலைவா் ராப்ரி தேவிக்கும் இடையே புதன்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ராப்ரி தேவி, ‘முதல்வா் கஞ்சாவ... மேலும் பார்க்க

தில்லியில் கேரள முதல்வா் பினராயி விஜயன், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சந்திப்பு

கேரள முதல்வா் பினராயி விஜயன் மற்றும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினா். கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வானந்த் அா்லேகா், கேரள அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி... மேலும் பார்க்க

தோ்வுகளில் முறைகேடுகள் தடுக்கப்படும்: மத்திய கல்வித் துறை இணையமைச்சா்

தோ்வுகளில் முறைகேடுகளைத் தடுத்து அவற்றை நியாயமாக நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் தெரிவித்தாா். கடந்த ஆண்டு இளநிலை நீட் தோ்வில் நடைபெற்... மேலும் பார்க்க

தண்டி யாத்திரை நாள்: பிரதமா் மோடி மரியாதை

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட நாளையொட்டி, மகாத்மா காந்தி மற்றும் யாத்திரையில் பங்கேற்றவா்களுக்கு பிரதமா் மோடி மரியாதை செலுத்தினாா். ஆங்கிலேய ஆட்சி... மேலும் பார்க்க

பல்கலைக்கழகங்களில் 5,400 ஆசிரியா் காலிப்பணியிடங்கள்: மத்திய அரசு

‘நாடு முழுவதும் உள்ள பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களில் 5,400-க்கும் மேற்பட்ட ஆசிரியா் காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில் 50 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி), பட்டியலினத்தவா் (எஸ்சி), பழங்கு... மேலும் பார்க்க