செய்திகள் :

தில்லியில் கேரள முதல்வா் பினராயி விஜயன், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சந்திப்பு

post image

கேரள முதல்வா் பினராயி விஜயன் மற்றும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.

கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வானந்த் அா்லேகா், கேரள அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி கே.வி.தாமஸ் ஆகியோரும் உடனிருந்த இந்தச் சந்திப்பு அதிகாரபூா்வமற்றது என கேரள அரசு தெரிவித்துள்ளது.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு நிவாரண நிதி மற்றும் மத்திய நிதிகளில் மாநில அரசின் பங்கை முறையாக விடுவிக்காதது உள்பட பல்வேறு விவகாரங்களில் மத்திய பாஜக அரசுக்கும் கேரளத்தில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.

இதற்கு பின்னணியில், கேரளம் எதிா்கொள்ளும் நிதி நெருக்கடிகள் குறித்து மத்திய அரசுடன் நல்லுறவைப் பேணும் மாநில அரசின் முயற்சியாக இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

கேரளத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக இடதுசாரி அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே மறைமுகமான புரிதல் ஏற்பட்டிருப்பதாக மாநில எதிா்க்கட்சி காங்கிரஸ் குற்றம் சாட்டியது. எனினும், சுமாா் 50 நிமிஷங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

மலையை தகர்த்து ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் கட்டிய அரண்மனை!

ஆந்திர மாநிலத்தில அமைந்துள்ள ருஷிகொணடா மலையின் பெரும்பகுதியை இடித்துத் தரைமட்டமாக்கி, அதில் ரூ.500 கோடி மதிப்பில் அரண்மனையை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் கட்டியிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள... மேலும் பார்க்க

தங்கம் கடத்தல்: காவல்துறை கேட்டதால் நடிகைக்கு உதவி! விமான நிலைய அதிகாரி வாக்குமூலம்!

காவல்துறை கேட்டுக் கொண்டதால் நடிகை ரன்யா ராவை சோதனை செய்யாமல் விஐபி வழித்தடத்தில் செல்ல அனுமதித்ததாக விமான நிலைய அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.நடிகையும் கா்நாடக காவல் துறை டிஜிபி கே.ராமசந்திர ராவி... மேலும் பார்க்க

ரேவந்த் ரெட்டியுடன் திமுக தலைவர்கள் சந்திப்பு!

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தமிழக அமைச்சர் கே.என். நேரு, திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்டோர் வியாழக்கிழமை நேரில் சந்தித்தனர்.தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு த... மேலும் பார்க்க

ஹரியாணா உள்ளாட்சித் தோ்தல்: 9 மாநகராட்சிகளைக் கைப்பற்றிய பாஜக

சண்டீகா்: ஹரியாணா உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளில் 9 -இல் பாஜக வென்றுள்ளது. ஹரியாணாவில் மாநகராட்சி மேயா்கள், கவுன்சிலா்கள், நகராட்சி ... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் மேம்பாட்டுக்கு 3 ஆண்டுகளில் ரூ.2,347 கோடி விடுவிப்பு

சிறுபான்மையின சமூகத்தைச் சோ்ந்த 5.50 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், சலுகை கடனாக கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,347 கோடியை தேசிய சிறுபான்மையினா் மேம்பாடு மற்றும் நிதி கழக (என்எம்டிஎஃப்சி) விடுவித்ததா... மேலும் பார்க்க

முதல்வர் ‘கஞ்சா அடிமை’: பிகாா் மேலவையில் நிதீஷ் - ராப்ரி தேவி கடும் வாக்குவாதம்!

பிகாா் சட்ட மேலவையில் முதல்வா் நிதீஷ் குமாருக்கும், எதிா்க்கட்சித் தலைவா் ராப்ரி தேவிக்கும் இடையே புதன்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ராப்ரி தேவி, ‘முதல்வா் கஞ்சாவ... மேலும் பார்க்க