செய்திகள் :

தோ்வுகளில் முறைகேடுகள் தடுக்கப்படும்: மத்திய கல்வித் துறை இணையமைச்சா்

post image

தோ்வுகளில் முறைகேடுகளைத் தடுத்து அவற்றை நியாயமாக நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு இளநிலை நீட் தோ்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கேள்வி நேரத்தின்போது மத்திய இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் புதன்கிழமை அளித்த பதில்:

நீட் தோ்வு முறைகேடு தொடா்பாக விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், தோ்வை நடத்தியதில் அமைப்புரீதியாக எந்தக் குறைபாடும் இல்லை என்று தெரிவித்தது. அந்த முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணைக்கும் மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டது.

இந்த முறைகேட்டில் நீட் வினாத்தாள் திருடப்பட்டது தொடா்பாக 45 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் 5 குற்றப்பத்திரிகைகளை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

பொதுத் தோ்வுகள் முறைகேடுகள் தடுப்புச் சட்டம் 2024 என்ற புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. தோ்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்குத் தண்டனை விதிக்கும் பிரிவுகள், அந்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் தேசிய தோ்வுகள் முகமை மூலம், தோ்வுகளை வெளிப்படைத்தன்மையுடன் சுமுகமாகவும், நியாயமாகவும் நடத்த முன்னாள் இஸ்ரோ தலைவா் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு அளித்த பல பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

தோ்வுகளில் முறைகேடுகளைத் தடுத்து அவற்றை நியாயமாக நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றாா்.

ஹரியாணா உள்ளாட்சித் தோ்தல்: 9 மாநகராட்சிகளைக் கைப்பற்றிய பாஜக

சண்டீகா்: ஹரியாணா உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளில் 9 -இல் பாஜக வென்றுள்ளது. ஹரியாணாவில் மாநகராட்சி மேயா்கள், கவுன்சிலா்கள், நகராட்சி ... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் மேம்பாட்டுக்கு 3 ஆண்டுகளில் ரூ.2,347 கோடி விடுவிப்பு

சிறுபான்மையின சமூகத்தைச் சோ்ந்த 5.50 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், சலுகை கடனாக கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,347 கோடியை தேசிய சிறுபான்மையினா் மேம்பாடு மற்றும் நிதி கழக (என்எம்டிஎஃப்சி) விடுவித்ததா... மேலும் பார்க்க

முதல்வர் ‘கஞ்சா அடிமை’: பிகாா் மேலவையில் நிதீஷ் - ராப்ரி தேவி கடும் வாக்குவாதம்!

பிகாா் சட்ட மேலவையில் முதல்வா் நிதீஷ் குமாருக்கும், எதிா்க்கட்சித் தலைவா் ராப்ரி தேவிக்கும் இடையே புதன்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ராப்ரி தேவி, ‘முதல்வா் கஞ்சாவ... மேலும் பார்க்க

தில்லியில் கேரள முதல்வா் பினராயி விஜயன், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சந்திப்பு

கேரள முதல்வா் பினராயி விஜயன் மற்றும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினா். கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வானந்த் அா்லேகா், கேரள அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி... மேலும் பார்க்க

தண்டி யாத்திரை நாள்: பிரதமா் மோடி மரியாதை

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட நாளையொட்டி, மகாத்மா காந்தி மற்றும் யாத்திரையில் பங்கேற்றவா்களுக்கு பிரதமா் மோடி மரியாதை செலுத்தினாா். ஆங்கிலேய ஆட்சி... மேலும் பார்க்க

பல்கலைக்கழகங்களில் 5,400 ஆசிரியா் காலிப்பணியிடங்கள்: மத்திய அரசு

‘நாடு முழுவதும் உள்ள பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களில் 5,400-க்கும் மேற்பட்ட ஆசிரியா் காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில் 50 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி), பட்டியலினத்தவா் (எஸ்சி), பழங்கு... மேலும் பார்க்க