செய்திகள் :

சென்னை: பார்க்கிங் இல்லையா? இனி கார் வாங்க முடியாது!

post image

சென்னையில் வாகன நிறுத்தத்திற்கான இடம் இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வரவுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் சாலைகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகின்றது. நகரப் பகுதிகளுக்குள் பத்து கிலோ மீட்டர் பயணிக்க ஒரு மணிநேரத்துக்கு மேலாகிறது.

அதிகளவிலானோர் பொதுப் போக்குவரத்தை தவிர்த்து சொந்த வாகனத்தில் பயணிப்பதும் போக்குவரத்து நெரிசலுக்கான முக்கிய காரணமாக உள்ளது.

இதையும் படிக்க : சென்னை: மாநகர குளிர்சாதனப் பேருந்துகளில் பயணிக்க புதிய ’பஸ் பாஸ்’!

இதனிடையே, குடியிருப்புப் பகுதிகளில் கார்களை நிறுத்த இடமின்றி சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்துவதால் பலருக்கும் இடையூறு ஏற்படுவதாக தொடர் புகார்கள் காவல்துறைக்கு வந்துகொண்டுள்ளது.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக, இனி சென்னையில் கார் வாங்குவோர் சொந்த நிறுத்துமிடம் இருந்தால் மட்டுமே வாங்க முடியும் என்ற விதிமுறையைக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான பரிந்துரையை தமிழக அரசிடம் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் அளித்துள்ளது.

புதிதாக கார் வாங்குவோர், காரை நிறுத்துவதற்கான நிறுத்துமிடம் குறித்த சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட கார் வாங்குபவர்கள், எத்தனை கார் வாங்குகிறார்களோ, அதற்கான நிறுத்துமிடச் சான்றிதழ் வழங்குவது அவசியம்.

புதிய விதிமுறைகளுக்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது ஏன்?

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.பொதுவாக, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போதுதான் அதற்கு முந்த... மேலும் பார்க்க

நாளை(மார்ச் 14) பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை(மார்ச் 14) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமு... மேலும் பார்க்க

தமிழகத்தில் தனிநபர் வருமானம் ரூ.2.78 லட்சமாக அதிகரிக்கும்: பொருளாதார ஆய்வறிக்கை

தமிழ்நாட்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் வரும் நிதியாண்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும்... மேலும் பார்க்க

‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25'-யை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட 'தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25' யை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலின் கனகசபை மீது, பக்தர்கள் ஏறுவதற்கு தடை விதித்த தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் பார்க்க

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்யத் தடை: உயர்நீதிமன்றம்

கரூரை அடுத்துள்ள நெரூரில் சதாசிவம் பிரம்மேந்திரா் சுவாமி நினைவு நாளில் நடைபெறும் எச்சில் இலை அங்கபிரதட்சணம் நிகழ்வுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை வியாழக்கிழமை தடை விதித்துள்ளது.கரூரை அடுத்த நெரூரில் ப... மேலும் பார்க்க