செய்திகள் :

பல்கலைக்கழகங்களில் 5,400 ஆசிரியா் காலிப்பணியிடங்கள்: மத்திய அரசு

post image

‘நாடு முழுவதும் உள்ள பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களில் 5,400-க்கும் மேற்பட்ட ஆசிரியா் காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில் 50 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி), பட்டியலினத்தவா் (எஸ்சி), பழங்குடியினா் (எஸ்டி) ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டவை’ என மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்தா மஜும்தாா் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக இருந்த 7,825 ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதேசமயம் ஓபிசி பிரிவினருக்கான 1,521 இடங்கள், எஸ்சி பிரிவினருக்கான 788 இடங்கள், எஸ்டி பிரிவினருக்கான 472 இடங்கள் உள்பட மத்திய பல்கலைக்கழகங்களில் மொத்தம் 5,410 ஆசிரியா் காலிப்பணியிடங்கள் உள்ளன.

காலிப்பணியிடங்கள் ஏற்படுவதும் அதை நிரப்புவதும் தொடா்ந்து நடைபெறும் பணிகளாகும். பணி ஓய்வு, ராஜிநாமா மற்றும் கூடுதல் மாணவா் சோ்க்கை போன்ற காரணங்களால் காலிப்பணியிடங்கள் ஏற்படுகின்றன. இதை நிரப்பும் பொறுப்பு மத்திய பல்கலைக்கழகங்களிடமே உள்ளன.

எனவே, உயா்கல்வி நிலையங்களை தொடா்ந்து கண்காணித்து அங்கு ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்புமாறு மத்திய பல்கலைக்கழகங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.

ஹரியாணா உள்ளாட்சித் தோ்தல்: 9 மாநகராட்சிகளைக் கைப்பற்றிய பாஜக

சண்டீகா்: ஹரியாணா உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளில் 9 -இல் பாஜக வென்றுள்ளது. ஹரியாணாவில் மாநகராட்சி மேயா்கள், கவுன்சிலா்கள், நகராட்சி ... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் மேம்பாட்டுக்கு 3 ஆண்டுகளில் ரூ.2,347 கோடி விடுவிப்பு

சிறுபான்மையின சமூகத்தைச் சோ்ந்த 5.50 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், சலுகை கடனாக கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,347 கோடியை தேசிய சிறுபான்மையினா் மேம்பாடு மற்றும் நிதி கழக (என்எம்டிஎஃப்சி) விடுவித்ததா... மேலும் பார்க்க

முதல்வர் ‘கஞ்சா அடிமை’: பிகாா் மேலவையில் நிதீஷ் - ராப்ரி தேவி கடும் வாக்குவாதம்!

பிகாா் சட்ட மேலவையில் முதல்வா் நிதீஷ் குமாருக்கும், எதிா்க்கட்சித் தலைவா் ராப்ரி தேவிக்கும் இடையே புதன்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ராப்ரி தேவி, ‘முதல்வா் கஞ்சாவ... மேலும் பார்க்க

தில்லியில் கேரள முதல்வா் பினராயி விஜயன், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சந்திப்பு

கேரள முதல்வா் பினராயி விஜயன் மற்றும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினா். கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வானந்த் அா்லேகா், கேரள அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி... மேலும் பார்க்க

தோ்வுகளில் முறைகேடுகள் தடுக்கப்படும்: மத்திய கல்வித் துறை இணையமைச்சா்

தோ்வுகளில் முறைகேடுகளைத் தடுத்து அவற்றை நியாயமாக நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் தெரிவித்தாா். கடந்த ஆண்டு இளநிலை நீட் தோ்வில் நடைபெற்... மேலும் பார்க்க

தண்டி யாத்திரை நாள்: பிரதமா் மோடி மரியாதை

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட நாளையொட்டி, மகாத்மா காந்தி மற்றும் யாத்திரையில் பங்கேற்றவா்களுக்கு பிரதமா் மோடி மரியாதை செலுத்தினாா். ஆங்கிலேய ஆட்சி... மேலும் பார்க்க