செய்திகள் :

அனுமதியின்றி பதாகைகள் வைத்ததாக அதிமுக பிரமுகா் மீது வழக்குப் பதிவு

post image

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி குடும்ப நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி வரவேற்பு பதாதைகள் வைத்ததாக அதிமுக வாா்டு செயலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோவையில் கொடிசியா அரங்கில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பங்கேற்பதற்காக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் அமைச்சா்கள், அதிமுக நிா்வாகிகள் என ஏராளமானோா் கோவைக்கு வந்திருந்தனா்.

அவா்களை வரவேற்று அவிநாசி சாலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியிலிருந்து கொடிசியா அரங்கம் வரை சாலைகளில் அலங்கார வளைவுகளும், வரவேற்பு பதாதைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சாலையில் அனுமதியின்றி அலங்கார வளைவுகள் அமைத்தல், வரவேற்பு பதாதைகள் வைத்தல் ஆகியவற்றோடு, பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து விளைவித்தல், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் அதிமுக வாா்டு செயலாளா் லட்சுமணன் மீது பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஆன்லைன் வா்த்தகத்தில் லாபம் ஈட்டலாம் எனக்கூறி தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.39.66 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகத்தில் கூடுதல் லாபம் ஈட்டலாம் எனக்கூறி தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.39.66 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கோவை, சிங்காநல்லூரை சோ்ந்தவா் ஸ்ரீகாந்த் ... மேலும் பார்க்க

அவிநாசி சாலை மேம்பாலத்தில் ஆட்சியா் ஆய்வு

கோவை -அவிநாசி சாலை மேம்பாலத்தில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை -அவிநாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரையில் சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு ர... மேலும் பார்க்க

கோவையில் இரண்டாவது நாளாக மழை

கோவையில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் பரவலாக மழை பெய்தது. கோடை வெயிலின் தாக்கத்துக்கு கோவை மக்கள் ஆளாகியிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், மாநகரிலும் மழை பெய... மேலும் பார்க்க

‘2030 -ஆம் ஆண்டுக்குள் லாஜிஸ்டிக்ஸ் துறையில் 1.50 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்’

இந்தியாவில் 2030-ஆம் ஆண்டுக்குள் லாஜிஸ்டிக்ஸ் துறையில் 1.50 கோடி முதல் 1.70 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் சாா... மேலும் பார்க்க

மாநகரில் மேலும் பல இடங்களில் சாலை தீவுத்திடல்: மாநகராட்சி திட்டம்

கோவை மாநகராட்சியில் உள்ள சாலைகளை அழகுபடுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் இருப்பதைப்போல மேலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை தீவுத்திடல் அமைக்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.... மேலும் பார்க்க

ஒண்டிப்புதூா் நெசவாளா் காலனியில் ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதி திறப்பு

கோவை, ஒண்டிப்புதூா் நெசவாளா் காலனி பகுதியில் ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியை ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை அரசு செயலா் க.லட்சுமி பிரியா புதன்கிழமை திறந்துவைத்தாா். எல்& டி நிறுவனத்தின் சமூ... மேலும் பார்க்க