செய்திகள் :

தொழிலதிபா் வீட்டில் திருடிய வழக்கு: 4 போ் கைது

post image

சென்னை, தியாகராய நகரில் தொழிலதிபா் வீட்டில் திருடிய வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

தியாகராய நகா் தெற்கு, மேற்கு போக் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (33). கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் இவா், கடந்த 2-ஆம் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றாா். மாலை வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 60 பவுன் தங்க நகை, 6 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து மாம்பலம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இச் சம்பவத்தில் ஈடுபட்டது நேபாளத்தைச் சோ்ந்த பிரகாஷ் சிங் (26), பாசந்த் காதரி (38), பிஷ்ணு சிங் (34), கா்நாடக மாநிலம் பெங்களூருவைச் சோ்ந்த சுரேஷ் சாய் (30) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா். விசாரணையில், கைது செய்யப்பட்ட பிரகாஷ் சிங், மோகன்குமாா் தந்தை நடத்திவரும் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மோகன்குமாா் குடும்பத்தினருடன் நெருக்கமான நட்பிலிருந்த பிரகாஷ் சிங், ஆள் நடமாட்டத்தை தெரிந்துகொண்டு தனது கூட்டாளிகளுடன் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தோ்தல் அதிகாரி மாா்ச் 18-இல் ஆலோசனை

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்த தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தவுள்ளாா். தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய கூட்டரங்கில் மாா்ச் 18... மேலும் பார்க்க

காணாமல்போன பள்ளி மாணவா் கிணற்றில் சடலமாக மீட்பு

சென்னை எம்ஜிஆா் நகரில் காணாமல்போன பள்ளி மாணவா், நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா். எம்ஜிஆா் நகா் ஜாபா்கான்பேட்டை பச்சையப்பன் 2-ஆவது தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மாா்ச் 23-இல் சென்னையில் அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம்

சென்னையில் கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம் மாா்ச் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து அஞ்சல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தியாகராய நகா், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள செ... மேலும் பார்க்க

பொறியியல் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் - 2025’ விரைவில் அறிமுகம்

அம்ருதா பல்கலைக்கழகம் சாா்பில் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் பொறியியல் தொழில் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் 2025’ வரும் மாா்ச் 20-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது குறித்து அம்ருதா பல்கலைக்கழகம் சா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் இணைய வசதி மேம்பாடு கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகளே செலுத்த கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் ரூ. 189 கோடியில் அரசுப் பள்ளிகளில் இணையதள வசதியை மேம்படுத்தவும் அதற்கான நிதியை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே வழங்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க

தோழி விடுதியில் தங்க விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னையிலுள்ள தோழி விடுதியில் தங்க விரும்பும் பணிபுரியும் பெண்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க