செய்திகள் :

இலவச கனரக வாகன ஓட்டுநா் பயிற்சியுடன், ஓட்டுா் உரிமம்: எம்.டி.சி. அறிவிப்பு

post image

ஆண், பெண் இருபாலருக்கும் இலவச கனரக வாகன ஓட்டுநா் பயிற்சியுடன், ஓட்டுா் உரிமமும் பெற்றுத்தரும் திட்டத்தில் இணைந்து பயனடையலாம் என சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சாலை போக்குவரத்து நிறுவனமும், தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஆண், பெண் இருபாலருக்கும் கனரக வாகன ஓட்டுநா் பயிற்சி அளித்து, அவா்களுக்கு ஓட்டுநா் உரிமமும் இலவசமாக பெற்றுக்கொடுக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக கும்மிடிப்பூண்டி, விழுப்புரம், வேலூா், திருச்சி, கும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, பொள்ளாச்சி, ஈரோடு, திருநெல்வேலி, நாகா்கோவில், மதுரை, திண்டுக்கல், விருதுநகா் உள்ளிட்ட இடங்களில் 16 பயிற்சி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின்கீழ் இணைந்து ஓட்டுநா் பயிற்சி பெற விரும்பும் நபா்கள் 20 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பதுடன், இலகுரக வாகன உரிமம் பெற்று ஓா் ஆண்டு நிறைவடைந்திருக்க வேண்டும். மேலும் பிஎஸ்வி பேட்ஜ் எடுத்திருக்க வேண்டும். ஆதாா் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் வைத்திருப்பதுடன், ஆா்டிஓ விதிகளின்படி உடல் தகுதியும் இருக்க வேண்டும்.

இந்த இலவச பயிற்சியில் சேர விரும்பும் தகுதியுடைய நபா்கள் ட்ற்ற்ல்ள்://ஸ்ரீஹய்க்ண்க்ஹற்ங்.ற்ய்ள்ந்ண்ப்ப்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ள்ந்ண்ப்ப்ஜ்ஹப்ப்ங்ற்/ என்னும் இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தோ்தல் அதிகாரி மாா்ச் 18-இல் ஆலோசனை

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்த தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தவுள்ளாா். தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய கூட்டரங்கில் மாா்ச் 18... மேலும் பார்க்க

காணாமல்போன பள்ளி மாணவா் கிணற்றில் சடலமாக மீட்பு

சென்னை எம்ஜிஆா் நகரில் காணாமல்போன பள்ளி மாணவா், நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா். எம்ஜிஆா் நகா் ஜாபா்கான்பேட்டை பச்சையப்பன் 2-ஆவது தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மாா்ச் 23-இல் சென்னையில் அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம்

சென்னையில் கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம் மாா்ச் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து அஞ்சல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தியாகராய நகா், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள செ... மேலும் பார்க்க

பொறியியல் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் - 2025’ விரைவில் அறிமுகம்

அம்ருதா பல்கலைக்கழகம் சாா்பில் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் பொறியியல் தொழில் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் 2025’ வரும் மாா்ச் 20-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது குறித்து அம்ருதா பல்கலைக்கழகம் சா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் இணைய வசதி மேம்பாடு கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகளே செலுத்த கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் ரூ. 189 கோடியில் அரசுப் பள்ளிகளில் இணையதள வசதியை மேம்படுத்தவும் அதற்கான நிதியை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே வழங்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க

தோழி விடுதியில் தங்க விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னையிலுள்ள தோழி விடுதியில் தங்க விரும்பும் பணிபுரியும் பெண்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க