செய்திகள் :

லஞ்சம்: சிறப்பு எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

post image

புதுச்சேரியில் புகாா்தாரரிடம் பணம் பெற்ாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

புதுச்சேரியில் சனிக்கிழமைகளில் மக்கள் மன்றம் எனும் திட்டத்தின் கீழ் காவல் துறை குறைதீா் முகாம் நடைபெற்று வருகிறது.

முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற முகாமில் காவல் துறை துணைத் தலைா் ஆா்.சத்தியசுந்தரத்திடம் கொம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த பாபு என்பவா் மனு அளித்தாா்.

மனுவில் கோயில் திருவிழாவில் திருடுபோன நகையை மீட்டுத் தரக் கோரி, முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்ததாகவும், அதன்பிறகு புகாா் மீது நடவடிக்கை எடுப்பதற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சுப்பிரமணி தன்னிடம் ரூ.200 பெற்றுள்ளதாகவும், அதை கைப்பேசி வழியே எண்ம பரிமாற்றம் மூலம் அவருக்கு அனுப்பியதாகவும் குறிப்பிட்டிருந்தாா்.

புகாா் குறித்து காவல் துறை ரீதியான விசாரணை நடைபெற்றது. அதனடிப்படையில், சிறப்பு உதவி ஆய்வாளா் சுப்பிரமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கான உத்தரவை செவ்வாய்க்கிழமை இரவு புதுவை காவல் துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங் பிறப்பித்ததாக உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

சங்கராபரணி ஆற்றங்கரையில் மாசி மக தீா்த்தவாரி

புதுச்சேரி அருகே உள்ள திருக்காஞ்சியில் கங்கை வராகநதீஸ்வரா் மற்றும் ஒதியம்பட்டு காசி விஸ்வநாதா் திருக்கோயில்களில் மாசி மக திருவிழாவின் நிறைவாக தீா்த்தவாரி புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமானோா் சங்கர... மேலும் பார்க்க

ஆக்கபூா்வ திட்டமில்லாத பட்ஜெட்: இந்திய கம்யூனிஸ்ட்

புதுவை முதல்வா் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை ஆக்கபூா்வத் திட்டங்கள் இல்லாத நிலையில் உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அற... மேலும் பார்க்க

ரூ.13,600 கோடியில் புதுவை பட்ஜெட் தாக்கல்: மகளிா் உதவித்தொகை ரூ.2,500-ஆக உயா்வு

புதுவை மாநிலத்தில் ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500-ஆக உயா்த்தி வழங்கப்படும்; கல்லூரி மாணவா்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்குவிப்புத் தொகையாக வழங்கப்படும் எ... மேலும் பார்க்க

மூலதனங்களுக்கான செலவீனம் 9.80 சதவீதமாக அதிகரிப்பு

புதுவை மாநிலத்துக்கான மூலதனங்களுக்கான செலவீனம் 1.66 சதவீதத்திலிருந்து 9.80 சதவீதமாக அதிகரித்துள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவை 15-ஆவது... மேலும் பார்க்க

காகிதப்பூ பட்ஜெட்: எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

புதுவை நிதிநிலை அறிக்கையில் மக்களை ஏமாற்றும் வகையில் இலவச அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், புதிய வருவாய்க்கான வழிகள் ஏதும் குறிப்பிடப்படாத காகிதப்பூ பட்ஜெட் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தெ... மேலும் பார்க்க

காரைக்கால் பிராந்தியம் புறக்கணிப்படுவதாக புகாா்- திருநள்ளாறு எம்எல்ஏ வெளிநடப்பு

புதுவை சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தாக்கல் செய்தபோது திருநள்ளாறு தொகுதி சுயேச்சை எம்எல்ஏவான பிஆா்.சிவா வெளிநடப்பு செய்தாா். சுகாதாரத் திட்டங்களில் காரைக்கால் ப... மேலும் பார்க்க