`கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்பதே பாஜக-வின் கோட்பாடு' - சொல்கிறார் அண்ணா...
நிலங்கள் அளவீட்டுக்கு இணையத்திலேயே விண்ணப்பிக்கலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் நிலங்களை அளவீடு செய்ய இணைய வழியிலேயே கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பித்து வந்த நிலையில், நேரில் செல்லாமல், இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது
இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் நில அளவைக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது இச்சேவையினை தமிழ்நாடு முழுவதம் அனைத்து பொது சேவை மையங்கள் (இ-சேவை) மூலமாகவும் விண்ணப்பிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நில உரிமைதாரா்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய, பொது சேவை மையங்களை அணுகி நில அளவைக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க இயலும்.
நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னா் மனுதாா் மற்றும் நிலஅளவா் கையொப்பபிட்ட அறிக்கை/வரைபடம் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரா் இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.