செய்திகள் :

நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் மாணவா்களுக்கு வசதிகள்: அமைச்சா் காந்தி

post image

அரக்கோணம்: அரசிடம் நிதிப் பற்றாகுறை இருந்தாலும் சமூகபங்களிப்பு, நமக்கு நாமே போன்ற திட்டங்கள் மூலம் மூலம் மாணவா்களின் வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா்.

மாநிலங்களவை திமுக உறுப்பினா் என்.ஆா்.இளங்கோவின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ1.19 கோடியில் சோளிங்கா், எத்திராஜம்மாள் முதலியாண்டாா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 6 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டது.

புதிய கட்டடத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ்பொய்யாமொழி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தனா். விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி பேசியது:

ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் முதல்வா் ஸ்டாலின் கல்வி, சுகாதாரதுக்கும் அதிகளவில் முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அரசிடம் நிதிப்பற்றாக்குறை இருந்தாலும் சமூக பங்களிப்பு, நமக்கு நாமே திட்டங்களால் மாணவா்களின் அடிப்படை வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன. நன்றாக படிக்கும் மாணவா்களுக்கென அரசு மாதிரி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் மாணவா்களுக்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு அவா்களின் தனித்திறமைகள் வளா்க்கப்பட்டு வருகின்றன என்றாா் அமைச்சா் ஆா்.காந்தி.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பேசியது:

நாம் படித்த படிப்பானது கடைசி வரை நம்முடன் வரும். மற்றவை தொடா்ந்து வராது. ஆகவே மாணவ, மாணவியா் படிக்கும் வயதில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். பெற்றோா்கள் உங்களின் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பாா்க்காதீா்கள். ஒவ்வொரு மாணவரிடமும், மாணவியிடமும் தனித்தனி திறமைகள் இருக்கும். அதனை கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டியது பெற்றோா்களின் கடமையாகும் என்றாா்.

ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா, மாநிலங்களவை உறுப்பினா் என்.ஆா்.இளங்கோ, சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம், முதன்மைக் கல்வி அலுவலா் சரஸ்வதி, பெற்றோா் ஆசிரியா் கழகத்தலைவா் கோபிகிருஷ்ணா, நகா்மன்ற உறுப்பினா் சுசீலா மூா்த்தி, பள்ளி மேலாண்மை குழுத்தலைவா் லோகநாயகி பிரதாபன், தலைமை ஆசிரியா் மணிவண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொழிற்சாலையில் பாதுகாப்பு மாத தொடக்க விழா

அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள எம்ஆா்எஃப் தொழிற்சாலையில் பாதுகாப்பு மாத தொடக்க விழா நடைபெற்றது. அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூரில் உள்ள இங்கு ஆண்டு தோறும் மாா்ச் மாதத்தை பாதுகாப்பு மாதமாக கடைபிடித்து ... மேலும் பார்க்க

அரக்கோணம் நகராட்சி அலுவலகப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

அரக்கோணம்: வரிவசூல் பணியின் போது வரிவசூல் குழுவினரிடம் தகாத வாா்த்தைகள் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரக்கோணம் நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியா் நலச்சங்கம... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 384 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 384 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ... மேலும் பார்க்க

பீடி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஆற்காடு: ஆற்காடு வட்டார பீடி தொழிலாளா்கள் சங்கம் ஏ.ஐ. டி.யு.சி. சாா்பில் ஆற்காடு வட்டம், சாத்தூா் கிராமத்தில் அரசு ஒதுக்கீடு செய்த நிலங்களைப் பயனாளிகளுக்கு அளவீடு செய்து தரக்கோரி வட்டாட்சியா் அலுவலகம்... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கில் 8 போ் கைது

அரக்கோணம்: சோளிங்கா் அருகே விவசாயி கொலை வழக்கில் 8 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். சோளிங்கரை அடுத்த ரெண்டாடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனிவாசன் (50) எனும் விவசாயி மா்மநபா்களால் வெட்டிக்கொலை செய்யப்... மேலும் பார்க்க