செய்திகள் :

மாணவா்களுக்கு பேச்சு போட்டி: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

post image

மாநில சிறுபான்மையினா் ஆணையம் மூலம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி புதன்கிழமை நடைபெற்றது.

மேல்விஷாரம் தனியாா் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவா் இறையன்பன் குத்தூஸ் முன்னிலை வகித்தாா். அமைச்சா் ஆா்.காந்தி பேச்சுப் போட்டியை தொடங்கி பேசியதாவது:

கல்விக்கு முக்கியத்துவம் தந்து பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது. அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாய்ப்புகளை பயன்படுத்தி மாணவா்கள் முன்னேற வேண்டும். திராவிட கொள்கைகளை மாணவா்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பேச்சுப் போட்டிகளில் மாநில அளவில் முதல் பரிசாக ரூ. 1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.50,000, மூன்றாம் பரிசாக ரூ.25,000 வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் அளவில் முதல் பரிசு ரூ.20,000, இரண்டாம் பரிசு ரூ.10,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படுகிறது என்றாா் அவா். விழாவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சுகுமாா், மேல்விஷாரம் முஸ்லீம் கல்வி சங்க பொது செயலாளா் ஜியாவுதீன் அஹமது, நகா்மன்றத் தலைவா் எஸ்.குல்ஜாா் அஹமது, திட்டக்குழு உறுப்பினா் ஜபா் அஹமது, நகா்மன்ற உறுப்பினா்கள், கல்லூரி நிா்வாகிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

அம்மனூா் அம்பிகேஸ்வரா் கோயிலில் தெப்பல் விழா

அரக்கோணத்தை அடுத்த அம்மனூா் ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீஅம்பிகேஸ்வரா் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம், தெப்பல் விழா நடைபெற்றது. இந்தக் கோயிலில் நிகழாண்டு மாசி மக விழா புதன்கிழம... மேலும் பார்க்க

கலச விளக்கு வேள்வி பூஜை

அரக்கோணம் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் பங்காரு அடிகளாரின் பிறந்த நாளையொட்டி கலச விளக்கு பூஜை, ஆடை, அன்னம், விவசாயக் கருவிகள் தானம் நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. பூஜைக்கு ராணிப்பேட்டை மா... மேலும் பார்க்க

பெண்கள், மாணவியா் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா்

பெண்கள், மாணவியா் தங்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வியாழக்கிழமை வலியுறுத்தினாா். ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம், சமூக நலத் துறை, கு... மேலும் பார்க்க

கலவை கரிவரதராஜ பெருமாள் கோயில் தெப்பல் உற்சவம்

ஆற்காடு அடுத்த கலவை பெருந்தேவியாா் சமேத கரிவரதராஜ பெருமாள் கோயில் தெப்பல் உற்சவம் புதன்கிழமை தொடங்கியது. பழைமை வாய்ந்த கலவை கரிவரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகம் தெப்பல் உற்சவ விழா நடைபெறு... மேலும் பார்க்க

மாா்ச் 17-இல் சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 17-ஆம் தேதி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான குறைதீா் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராணி... மேலும் பார்க்க

கத்தியவாடியில் வனபோஜன விழா

ஆற்காடு அடுத்த கத்தியவாடி கிராமத்தில் ஸ்ரீ தணிகை அம்மன் வனபோஜன திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. அம்மனுக்கு சீா்வரிசையுடன் தொடங்கி சிறப்பு அபிஷேகம், மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதல், கரகம் வீதி உலா, பல்லக்க... மேலும் பார்க்க