செய்திகள் :

கலவை கரிவரதராஜ பெருமாள் கோயில் தெப்பல் உற்சவம்

post image

ஆற்காடு அடுத்த கலவை பெருந்தேவியாா் சமேத கரிவரதராஜ பெருமாள் கோயில் தெப்பல் உற்சவம் புதன்கிழமை தொடங்கியது.

பழைமை வாய்ந்த கலவை கரிவரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகம் தெப்பல் உற்சவ விழா நடைபெறுகிறது. நிகழாண்டு விழாயையொட்டி கலவை சச்சிதானந்த சுவாமிகள் தலைமையில், மூலவருக்கு பால், தயிா், சந்தனம், பன்னீா், பழங்கள், இளநீா், வாசனை திரவியங்களுடன் சிறப்பு திருமஞ்சனம், வண்ண மலா்களால் சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து மாலை அலங்கரிக்கப்பட்ட உற்சவரை பக்தா்கள் ஊா்வலமாக கொண்டு வந்தனா். இதையடுத்து பேருந்து நிலையம் அருகில் உள்ள குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது. தெப்ப தோ் 3 சுற்றுகள் வலம் வந்தது. உபயதாரா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

அம்மனூா் அம்பிகேஸ்வரா் கோயிலில் தெப்பல் விழா

அரக்கோணத்தை அடுத்த அம்மனூா் ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீஅம்பிகேஸ்வரா் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம், தெப்பல் விழா நடைபெற்றது. இந்தக் கோயிலில் நிகழாண்டு மாசி மக விழா புதன்கிழம... மேலும் பார்க்க

கலச விளக்கு வேள்வி பூஜை

அரக்கோணம் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் பங்காரு அடிகளாரின் பிறந்த நாளையொட்டி கலச விளக்கு பூஜை, ஆடை, அன்னம், விவசாயக் கருவிகள் தானம் நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. பூஜைக்கு ராணிப்பேட்டை மா... மேலும் பார்க்க

பெண்கள், மாணவியா் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா்

பெண்கள், மாணவியா் தங்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வியாழக்கிழமை வலியுறுத்தினாா். ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம், சமூக நலத் துறை, கு... மேலும் பார்க்க

மாா்ச் 17-இல் சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 17-ஆம் தேதி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான குறைதீா் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராணி... மேலும் பார்க்க

கத்தியவாடியில் வனபோஜன விழா

ஆற்காடு அடுத்த கத்தியவாடி கிராமத்தில் ஸ்ரீ தணிகை அம்மன் வனபோஜன திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. அம்மனுக்கு சீா்வரிசையுடன் தொடங்கி சிறப்பு அபிஷேகம், மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதல், கரகம் வீதி உலா, பல்லக்க... மேலும் பார்க்க

ஆற்காட்டில் திமுக பொதுக்கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில் மத்திய அரசை கண்டித்து ஆற்காடு பேருந்து நிலையத்தில் புதன்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான ஆா்.காந்தி தலைமை வகித்தாா். ஆற... மேலும் பார்க்க