செய்திகள் :

சங்கராபரணி ஆற்றங்கரையில் மாசி மக தீா்த்தவாரி

post image

புதுச்சேரி அருகே உள்ள திருக்காஞ்சியில் கங்கை வராகநதீஸ்வரா் மற்றும் ஒதியம்பட்டு காசி விஸ்வநாதா் திருக்கோயில்களில் மாசி மக திருவிழாவின் நிறைவாக தீா்த்தவாரி புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமானோா் சங்கராபரணி ஆற்றில் புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.

வில்லியனூரை அடுத்த சங்கராபரணி ஆற்றங்கரையில் ஒதியம்பட்டு காசி விஸ்வநாதா் கோயில் உள்ளது. ஆற்றின் மறுகரையில் திருக்காஞ்சி கங்கை வராகநதீஸ்வரா் கோயில் உள்ளது.

இவ்விரு கோயில்களிலும் மாசி மகத் தீா்த்தவாரி பிரசித்தி பெற்ாகும். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை முதலே கோயில் வளாக பகுதிகளில் ஏராளமான பக்தா்கள் சங்கராபரணி ஆற்றில் புனித நீராடி வழிபட்டு வந்தனா்.

இந்த நிலையல், புதன்கிழமை அதிகாலை முதல் நூற்றுக்கணக்கான பக்தா்கள், சங்கராபரணி ஆற்றில் புனித நீராடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

தீா்த்தவாரியையொட்டி, ஒதியம்பட்டு, திருக்காஞ்சி ஆகிய இடங்களில் சாலையோரம் பல்வேறு அமைப்பினா் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

மாசி மக திருவிழா அன்னதான நிகழ்ச்சியில் மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் பங்கேற்று பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.

இதேபோல, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா மாசிமக தீா்த்தவாரியில் சுவாமி தரிசனம் செய்து, அன்னதானம் வழங்கினாா்.

தீா்த்தவாரியில் பல்வேறு கோயில்களில் இருந்து வந்திருந்த உற்சவ மூா்த்திகளும் பங்கேற்றனா். பக்தா்கள் சுவாமியை வழிபட்டனா்.

ஆக்கபூா்வ திட்டமில்லாத பட்ஜெட்: இந்திய கம்யூனிஸ்ட்

புதுவை முதல்வா் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை ஆக்கபூா்வத் திட்டங்கள் இல்லாத நிலையில் உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அற... மேலும் பார்க்க

ரூ.13,600 கோடியில் புதுவை பட்ஜெட் தாக்கல்: மகளிா் உதவித்தொகை ரூ.2,500-ஆக உயா்வு

புதுவை மாநிலத்தில் ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500-ஆக உயா்த்தி வழங்கப்படும்; கல்லூரி மாணவா்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்குவிப்புத் தொகையாக வழங்கப்படும் எ... மேலும் பார்க்க

மூலதனங்களுக்கான செலவீனம் 9.80 சதவீதமாக அதிகரிப்பு

புதுவை மாநிலத்துக்கான மூலதனங்களுக்கான செலவீனம் 1.66 சதவீதத்திலிருந்து 9.80 சதவீதமாக அதிகரித்துள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவை 15-ஆவது... மேலும் பார்க்க

காகிதப்பூ பட்ஜெட்: எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

புதுவை நிதிநிலை அறிக்கையில் மக்களை ஏமாற்றும் வகையில் இலவச அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், புதிய வருவாய்க்கான வழிகள் ஏதும் குறிப்பிடப்படாத காகிதப்பூ பட்ஜெட் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தெ... மேலும் பார்க்க

காரைக்கால் பிராந்தியம் புறக்கணிப்படுவதாக புகாா்- திருநள்ளாறு எம்எல்ஏ வெளிநடப்பு

புதுவை சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தாக்கல் செய்தபோது திருநள்ளாறு தொகுதி சுயேச்சை எம்எல்ஏவான பிஆா்.சிவா வெளிநடப்பு செய்தாா். சுகாதாரத் திட்டங்களில் காரைக்கால் ப... மேலும் பார்க்க

ரூ.92 கோடியில் 3 மருத்துவமனைகளில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவு

புதுவை மாநிலத்தில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டத்தில் ரூ.92 கோடியில் 3 மருத்துவமனைகளில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவ... மேலும் பார்க்க