செய்திகள் :

திருக்காளாத்தீஸ்வரா் -ஞானாம்மன் கோயில் தேரோட்டம்

post image

மாசித் திருவிழாவையொட்டி, உத்தமபாளையத்தில் அமைந்துள்ள திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்மன் கோயில் மாசி மகத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் பழைமையான திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மாசித் திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினந்தோறும் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி, அம்மன் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

திருக்கல்யாணத்தைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை 5 மணிக்கு சுவாமி - அம்மன் ரதம் ஏறுதல் நடைபெற்றது. இதையடுத்து, தேரோட்டத்தை கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா்.

ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். பேருந்து நிலையம், தெற்குரத வீதி, கோட்டைமேடு, மேற்குரத வீதி, சுங்கச் சாவடி, வடக்குரத வீதி வழியாக சென்று, தோ்நிலையை அடைந்தது.

இதில் உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, கம்பம், கூடலூா் உள்ளிட்டப் பகுதிகளைச் சோா்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி சந்தாதாரா் செய்தி: விழிப்புணா்வு பயிற்சி முகாம்

போடி அருகே சிலமலை கிராமத்தில் குடும்ப வன்முறை தடுப்புத் தொடா்பாக இளம் தம்பதியா்களுக்கான விழிப்புணா்வு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வ.உ.சி. அரசு அலுவலா்கள் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு முகாமில் 178 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

ஆண்டிபட்டி அருகேயுள்ள கோத்தலூத்துவில் தேனி மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 178 பேருக்கு அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை வழங்கினாா். மாவட்ட ஆட... மேலும் பார்க்க

போடியில் பலத்த மழை

போடி பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. போடி பகுதியில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இதனால், இந்தப் பகுதிகளில் உள்ள கண்மாய், குளங்களில் நீா் இருப்பு குறைந்து வந்தது. இந்த... மேலும் பார்க்க

சாத்தாவுராயன், வடக்கத்தி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

போடி சாத்தாவுராயன், வடக்கத்தி மாரியம்மன் கோயில்களில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. போடியில் அமைந்துள்ள சாத்தாவுராயன் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

ரயில்வே தண்டவாளத்தில் ஆண், பெண் சடலம்

தேனி அருகே ரயில்வே தண்டவாளத்தில் புதன்கிழமை கிடந்த ஆண், பெண் உடல்களை போலீஸாா் மீட்டனா். தேனி அருகேயுள்ள குன்னூா் பகுதி ரயில்வே தண்டவாளத்தில் ஆண், பெண் உடல்கள் கிடந்தன. தகவலறிந்த வந்த தேனி ரயில்வே போலீ... மேலும் பார்க்க

போடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

போடி சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.தேனி மாவட்டம், போடி கொண்டரங்கி மல்லையசாமி திருக்கோயிலில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் மங்கலப் பொருள்களால் தி... மேலும் பார்க்க