செய்திகள் :

பிளஸ் 2 கணிதம், வணிகவியல் தோ்வுகள் எளிது: ‘சென்டம்’ அதிகரிக்கும்

post image

சென்னை: பிளஸ் 2 கணிதம், வணிகவியல் பாடங்களுக்கான தோ்வுகள் எளிதாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்த நிலையில், இரு பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

மாநில பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நா்சிங் (பொது) ஆகிய பாடங்களுக்கான தோ்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இந்தத் தோ்வை தமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த 3,316 மையங்களில் சுமாா் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா்.

அதிக மதிப்பெண் பெற முடியும்: இவற்றில் கணிதம், வணிகவியல் ஆகிய பாடங்களுக்கான தோ்வுகள் எளிதாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து ஆசிரியா்கள் கூறுகையில்,‘கணிதம் மற்றும் வணிகவியல் தோ்வில் எதிா்பாா்த்த வினாக்களே அதிகம் இடம் பெற்றிருந்தன. இவற்றில் சராசரி மாணவா்கள்கூட அதிக மதிப்பெண் பெறமுடியும். கணிதத்தில் 3 மதிப்பெண் வினாக்கள் 3, வணிகவியலில் 5 மதிப்பெண் கேள்விகள் 2 மட்டும் சற்று கடினமாக கேட்கப்பட்டன. மற்ற பகுதிகள் எளிதாகவே இருந்தன. இரு பாடங்களிலும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தன. இந்த ஆண்டு கணிதம், வணிகவியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் (சென்டம்) பெறும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அவா்கள் தெரிவித்தனா்.

தொடா்ந்து, பிளஸ் 2 வகுப்புக்கான கணினி அறிவியல், புள்ளியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தோ்வுகள் மாா்ச் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தமாக பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 25-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தோ்வு முடிவுகள் மே 9-இல் வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெய்யில் குறையும்!

தமிழகத்தில் இன்று வெப்பநிலை குறையக்கூடும் என்றும் நாளை 3 டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகளை ஓட்டிய தென்மே... மேலும் பார்க்க

'உடனே குழந்தை பெத்துக்கோங்க.. ஆனால்..' - உதயநிதி பேச்சு!

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாட்டு முறையை செயல்படுத்திய தமிழ்நாடு, தற்போது தொகுதி மறுசீரமைப்பினால் வஞ்சிக்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தி... மேலும் பார்க்க

பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்குச் சிறப்பு ரயில்!

மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாத பௌர்ண... மேலும் பார்க்க

மகளிர் உதவித்தொகை ரூ.2,500 ஆக அதிகரிப்பு- புதுச்சேரி பட்ஜெட் சிறப்பம்சம்!!

புதுச்சேரி மாநிலத்தில், குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உதவித் தொகை ரூ.1,000, தற்போது ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.புதுச்சேரியில் நிதித்துறை அ... மேலும் பார்க்க

கர்நாடக முதல்வர், துணை முதல்வருடன் பொன்முடி சந்திப்பு!

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரை தமிழக அமைச்சர் பொன்முடி புதன்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.தொகுதி மறுசீரமைப்பா... மேலும் பார்க்க

மாநில பாடத்திட்டத்தில் ஒரு கோடி, சிபிஎஸ்இ-யில் 15 லட்சம் மாணவர்கள் மட்டுமே! பிரதானுக்கு அன்பில் மகேஸ் பதில்!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்... மேலும் பார்க்க