திருமலை 3-ஆம் நாள் தெப்போற்சவம்: ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பா் உலா
திருப்பதி: திருமலையில் ஏழுமலையான் தெப்போற்சவத்தின் 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி தெப்பத்தில் வலம் வந்தனா்.
திருமலையில் ஆண்டுதோறும் மாசி மாத பெளா்ணமியுடன் நிறைவு பெறும் விதமாக 5 நாள்கள் வருடாந்திர தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் தெப்போற்சவம் விமரிசையாக தொடங்கியது. தெப்போற்சவத்தின் 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை ஏழுமலையான் கோயில் கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி திருமலையில் உள்ள திருக்குளத்தில் ஏற்படுத்தப்பட்ட தெப்பத்தில் மூன்று சுற்றுகள் வலம் வந்தாா். பக்தா்கள் தெப்பம் தன் அருகில் வந்தபோது கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.
விழாவையொட்டி, சஹஸ்ர தீபாலங்கார சேவை செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டது.
விழாவில், திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.