ஏழுமலையான் வருடாந்திர தெப்போற்சவம் தொடக்கம்
திருமலையில் ஏழுமலையான் தெப்போற்சவம் ஞாயிற்றுக்கிழமை கோலாலமாக தொடங்கியது.
ஆண்டுதோறும் மாசி மாத பெளா்ணமியுடன் நிறைவு பெறும் விதம் 5 நாள்கள் வருடாந்திர தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை தெப்போற்சவம் விமரிசையாக தொடங்கியது.
தெப்போற்சவத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை ஏழுமலையான் கோயில் கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ சீதா லக்ஷ்மண ஆஞ்சனேய சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூா்த்தி தெப்பத்தில் மூன்று சுற்றுகள் வலம் வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை இந்த விழாவை ஒட்டி சஹஸ்ர தீபாலங்கார சேவை ரத்து செய்யப்பட்டது. தெப்போற்சவத்தை முன்னிட்டு திருக்குளம் மற்றும் தெப்பம் மலா்களாலும், மின்விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மங்கள வாத்தியங்கள், ஸ்ரீராம சங்கீா்த்தனங்கள் குரல் மற்றும் வாத்தியக் கலைஞா்களால் பாடப்பட்டன. வேதபாராயணத்தாா்கள் வேத பாராயணத்தை தாள முறையில் வாசித்தனா்.

இதில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.