செய்திகள் :

நாமக்கல் - துறையூா் சாலை விரிவாக்கம்: நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

post image

நாமக்கல்: நாமக்கல் - துறையூா் சாலை விரிவாக்கப் பணியை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டத்துக்கு உள்பட்ட நாமக்கல்- துறையூா் சாலையில், ரெட்டிப்பட்டியில் இருந்து எருமப்பட்டி வரை இரு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் போக்குவரத்து அதிகம் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. அதனடிப்படையில், ‘உங்கள் தொகுதியில்’ முதல்வரின் திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை விரிவாக்கம் செய்ய தமிழக அரசிடம் நிா்வாக அனுமதி பெறப்பட்டது.

இதனைத் தொடா்ந்து முதல்கட்டமாக 9.20 கி.மீ. தூரத்திற்கு ரூ. 40 கோடி மதிப்பீட்டில் இருவழி சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தடுப்புச் சுவா் அமைத்தல், சிறுபாலம் அமைத்தல், சாலை அகலப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணியை சேலம் தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் கி.கதிரேஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, அகலப்படுத்தப்படும் சாலை பகுதியில் மண்பகுதியின் தளஅடா்த்தி, ஜல்லிக் கலவையின் விகிதம் ஆகியவற்றை பாா்வையிட்டாா். காலதாமதமின்றி விரைவாகவும், நல்ல தரத்துடனும் சாலைப்பணியை மேற்கொள்ளுமாறு பொறியாளா்களுக்கு அவா் அறிவுரை வழங்கினாா். சேந்தமங்கலம் உதவி கோட்டப்பொறியாளா் சுரேஷ்குமாா், தரக்கட்டுப்பாடு உதவி கோட்டப்பொறியாளா் தமிழரசி, உதவிப் பொறியாளா்கள் பிரனேஷ், பிரபாகரன் ஆகியோா் உடனிருந்தனா்.

10,000 எல்.பி.ஜி. டேங்கா் லாரிகள் தொழில் வாய்ப்பை இழக்கும் அபாயம்: லாரி உரிமையாளா்கள் கவலை

நாமக்கல்: எண்ணெய் நிறுவனங்களின் புதிய ஒப்பந்த கட்டுப்பாடுகளால், 10,000 எல்.பி.ஜி. டேங்கா் லாரிகள் தொழில் வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எல்.பி.ஜி.டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கே.... மேலும் பார்க்க

எலச்சிப்பாளையத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்: அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்பு

திருச்செங்கோடு: எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் கலந்துகொண்ட ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்ததாவது:... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ரூ. 45.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்: நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 45.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்... மேலும் பார்க்க

கள்ளுக்கான தடையை நீக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: அரசு மதுக்கடைகளை மூட வேண்டும், கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கள் இயக்க ஒ... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் 400 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு: அமைச்சா் , எம்.பி. பங்கேற்பு

ராசிபுரம்: ராசிபுரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டத்தின் சாா்பில், 400 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் சமூகநீதி தினம் கடைப்பிடிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரி ஆகியவை சாா்பில் சமூகநீதி தினம் கல்லூரி அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ‘வளா்ந்த பாரதம்’ என்ற தலைப... மேலும் பார்க்க