செய்திகள் :

எலான் மஸ்க் நிறுவனத்துடன் ஜியோ ஒப்பந்தம்!

post image

ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து, ஜியோ நிறுவனமும் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸுக்கு சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள், சர்வதேச அளவில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த செயற்கைக்கோள் மூலம் உலகம் முழுவதுமுள்ள கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இணைய சேவையை இந்தியாவுக்குள் அறிமுகம் செய்வதற்கான முயற்சியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிக்க : எலான் மஸ்க் உடன் இணையும் ஏர்டெல்!

தற்போது முதல் நிறுவனமாக ஏர்டெல் நிறுவனத்துடன் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்தொடர்ச்சியாக ஜியோவும் ஸ்டார்லிங்கின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இரு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் அதிவேக இணையசேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் ஒழுங்குமுறை அனுமதிகளுக்குட்பட்டதாக உள்ளது. இதனால் இந்திய தேசிய விண்வெளி அங்கீகார மையம் மற்றும் மத்திய தொலைத்தொடர்புத் துறை ஒப்புதலுக்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் காத்திருக்கிறது.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் உதவியுடன் தொலைதூர கிராமங்கள், அங்குள்ள கல்வி நிலையங்கள், மருத்துவமனை மற்றும் தொழில் மேம்பாட்டிற்காக சேவையை ஏர்டெலும் ஜியோவும் வழங்கவுள்ளது.

டெலாய்ட் விருது பெற்ற 9 தமிழக நிறுவனங்கள்

பிரிட்டனைச் சோ்ந்த சா்வதேச சேவை நிறுவனங்களின் வலைக்கூட்டமைப்பான டெலாய்ட், அண்மையில் வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகச் சிறந்த வளா்ச்சி பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் ஒன... மேலும் பார்க்க

8% குறைந்த சமையல் எண்ணெய் இறக்குமதி

இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் குறைந்துள்ளது. இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

ஹோண்டா 2 சக்கர வாகன விற்பனை சரிவு

முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டாா்சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியாவின் உள்நாட்டு மொத்த விற்பனை பிப்ரவரி மாதத்தில் 7 சதவீதம் சரிந்துள்ளது. இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.15,504 கோடி நிலுவை வைத்துள்ளன சர்க்கரை ஆலைகள்!

புதுதில்லி: அரசு தரவுகளின் அடிப்படையில், நடப்பு ஆண்டு 2024 அக்டோபர் முதல் மார்ச் 5ஆம் தேதி வரை சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.15,504 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளனர்.மாநிலங்களவையில் எழுத்துப... மேலும் பார்க்க

எலான் மஸ்க் உடன் இணையும் ஏர்டெல்!

நாடு முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக ஏர்டெல் நிறுவனம் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் அதிவேக... மேலும் பார்க்க

ஐபிஓவை வெளியிட கிரிசாக் நிறுவனத்திற்கு செபி ஒப்புதல்!

புதுதில்லி: மாணவர் ஆட்சேர்ப்பு தீர்வு நிறுவனமான, 'கிரிசாக்' நிறுவனம், ஐ.பி.ஓ. வாயிலாக ரூ.1,000 கோடி திரட்ட, செபியின் ஒப்புதலை பெற்றுள்ளது.முன்மொழியப்பட்ட ஐபிஓ மூலம், பிங்கி அகர்வால் மற்றும் மனிஷ் அகர்... மேலும் பார்க்க