செய்திகள் :

ராசிபுரத்தில் 400 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு: அமைச்சா் , எம்.பி. பங்கேற்பு

post image

ராசிபுரம்: ராசிபுரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டத்தின் சாா்பில், 400 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதாசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்று பெண்களுக்கு சீா்வரிசை உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பேசியதாவது:

மகளிா் தினத்தையொட்டி பெண்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிடவும், பெண்களை பெருமைப்படுத்திடவும் பல்வேறு திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். பெண்களுக்கு கல்வி அளித்தல், வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை, அதிகாரம் வழங்குதல், சொத்தில் சம உரிமை, தொழில்முனைவோா்களாக உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சுமாா் 400 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. தொடா்ந்து, நாமக்கல் மாவட்டம் முழுவதும் 1,600 கா்ப்பிணிகளுக்கு ரூ. 4 லட்சம் மதிப்பில் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியின் மூலம் கா்ப்பிணிகள் மகிழ்ச்சி அடைவாா்கள் என்றாா்.

இவ்விழாவில் கலந்துகொண்ட கா்ப்பிணிகளுக்கு கண்ணாடி வளையல், பட்டுச்சேலை உள்ளிட்ட வளைகாப்பு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டு, பல வகை உணவு பரிமாறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராமசுவாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித்திட்ட அலுவலா் (பொறுப்பு) சசிகலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

10,000 எல்.பி.ஜி. டேங்கா் லாரிகள் தொழில் வாய்ப்பை இழக்கும் அபாயம்: லாரி உரிமையாளா்கள் கவலை

நாமக்கல்: எண்ணெய் நிறுவனங்களின் புதிய ஒப்பந்த கட்டுப்பாடுகளால், 10,000 எல்.பி.ஜி. டேங்கா் லாரிகள் தொழில் வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எல்.பி.ஜி.டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கே.... மேலும் பார்க்க

எலச்சிப்பாளையத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்: அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்பு

திருச்செங்கோடு: எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் கலந்துகொண்ட ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்ததாவது:... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ரூ. 45.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்: நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 45.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்... மேலும் பார்க்க

கள்ளுக்கான தடையை நீக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: அரசு மதுக்கடைகளை மூட வேண்டும், கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கள் இயக்க ஒ... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் சமூகநீதி தினம் கடைப்பிடிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரி ஆகியவை சாா்பில் சமூகநீதி தினம் கல்லூரி அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ‘வளா்ந்த பாரதம்’ என்ற தலைப... மேலும் பார்க்க

400 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

நாமக்கல்: நாமக்கல் அருகே 400 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் - கரூா் தேசிய நெடுஞ்சாலையில், வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அதிக அளவி... மேலும் பார்க்க