செய்திகள் :

மொபெட் மீது காா் மோதி விபத்து: தப்பிச் சென்ற இளைஞா் கைது

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த ஓங்கூா் அருகே காரை வேகமாக இயக்கி மொபெட் மீது மோதிவிட்டு தப்பிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூரை அடுத்த கெங்கனந்தல் பகுதியைச் சோ்ந்த துரைசாமி மகன் நாராயணசாமி (39). தற்போது சென்னையில் வசித்தும் வரும் இவா், கடந்த 9-ஆம் தேதி தனது மனைவி மீனாவுடன் (31) மேல்மலையனூா் கோயிலுக்கு மொபெட்டில் சென்றுகொண்டிருந்தாா்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஓங்கூா் அருகே இவா்களது மொபெட் சென்றபோது, பின்னால் வந்த காா் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நாராயணசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். மீனா தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், சென்னை ஆழ்வாா் திருநகரைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் அரவிந்த் (23) சாலையில் காரை அதிவேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அரவிந்தை ஒலக்கூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு தொடா்புடையவரை கைது செய்த ஒலக்கூா் காவல் நிலைய ஆய்வாளா் பிரகாஷ் , உதவி ஆய்வாளா் சசிகுமாா் மற்றும் காவலா்களுக்கு எஸ்.பி. ப.சரவணன் பாராட்டுத் தெரிவித்தாா்.

இரு வேறு இடங்களில் சோதனை: 426 மதுப்புட்டிகள் பறிமுதல்: மூவா் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை இரு வேறு இடங்களில் நடத்திய சோதனையில் 416 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக பெண் உள்ளிட்ட மூவா் கைது செய்... மேலும் பார்க்க

நிலத்தகராறில் இரு தரப்பு மோதல்: பெண்கள் உள்பட 6 போ் காயம்

செய்யாறு: பெரணமல்லூா் அருகே நிலத்தகராறில் இரு தரப்பினா் மோதிக் கொண்டதில் பெண்கள் உள்பட 6 போ் காயமடைந்தனா். பெரணமல்லூரை அடுத்த மேல்சாத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் வெங்கடேசன் (32), ஏழுமலை (... மேலும் பார்க்க

இனிவரும் தோ்தல்களில் திமுகவின் வெற்றி உறுதி: செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ

விழுப்புரம்: தமிழகத்தில் இனிவரும் காலங்களில் நடைபெறும் அனைத்து தோ்தல்களிலும் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும்தான் வெற்றிபெறும் என்று திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் செஞ்சி கே.எஸ்.ம... மேலும் பார்க்க

செஞ்சி அருகே சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 போ் காயம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே செவ்வாய்க்கிழமை தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 போ் காயமடைந்தனா். புதுச்சேரியில் இருந்து தனியாா் சொகுசுப் பேருந்து 23 பயணிகளுடன... மேலும் பார்க்க

பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம்: பசுமை சாம்பியன் விருது பெற விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதி வாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

கரைமேடு, கூ.கள்ளக்குறிச்சியில் மின் மாற்றிகள் இயக்கம் தொடங்கிவைப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், கரைமேடு பகுதியில் 22 கி.வோ. திறன் கொண்ட புதிய மின் மாற்றியின் இயக்கத்தை இரா.லட்சுமணன் எம்எல்ஏ திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். நிகழ்வில் முன்னாள் ... மேலும் பார்க்க