செய்திகள் :

Jailer 2: இணைகிறாரா மாஸ் ஹீரோ? பட்டை தீட்டப்பட்ட ஃபார்முலா; படத்தின் கதை இது தானா?

post image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் கூட்டணியின் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடந்துவருகிறது. 'கூலி' படப்பிடிப்பில் தனது போர்ஷனை முடித்துக்கொடுத்துவிட்ட வேகத்தில், அடுத்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார் ரஜினிகாந்த்.

ஜெயிலர் 2

ரஜினியின் திரைப்பயணத்தில் வசூலில் மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் 'ஜெயிலர்'. ஓய்வுபெற்ற ஜெயிலர் முத்துவேல் பாண்டியனாக நடித்திருந்த ரஜினி, அனிருத்தின் மிரட்டலான இசை, நெல்சனின் கமர்சியல் மீட்டர் என உருவான இப்படம் 650 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது.

இயக்குநர் நெல்சன்

இந்த ஒரே படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என மல்டி ஸ்டார்களின் கூட்டணியும், ஒரு பாடலுக்கு தமன்னாவின் ஆட்டமும் படத்தின் வெற்றிக்கு பெருமளவில் உதவியதால், இதையே இப்போது ஃபார்முலாவாக்கியுள்ளனர். லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினி நடித்து முடித்திருக்கும் 'கூலி"யில் கூட இதே ஃபார்முலாதான் கடைபிடிக்கப்பட்டுள்ளது. 'ஜெயிலர்' ஃபார்முலா என்றே பேசப்பட்ட பின், 'ஜெயிலர் 2' இந்த ஃபார்முலா இன்னும் பட்டை தீட்டப்பட்டுள்ளது.

'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைப்போல இரண்டாம் பாகத்தின் நடிகர்களின் பட்டியலும் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகவிருக்கின்றன. கூடுதலாக இதில் பாலகிருஷ்ணாவும் இணையலாம் என்கின்றனர். முதல் பாகத்திலேயே அவர் நடித்திருக்க வேண்டியது. ரொம்பவும் சின்ன கதாபாத்திரமாக இருக்கும் என்பதால், அடுத்த படத்தில் பெரிய ரோலில் கொண்டு வரலாம் என நெல்சன் விரும்பியதால், இரண்டாம் பாகத்திற்குள் வருகிறார் பாலய்யா.

ஜெயிலர்

'ஜெயிலர் 2'வின் படப்பிடிப்பு சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கம் ஒன்றிற்கு அருகே தான் தொடங்கியுள்ளது. இந்த ஷெட்யூலில் ரஜினியின் போர்ஷன்களை படமாக்கி வருகின்றனர். தொடர்ந்து 15 நாட்கள் இதே இடத்திலும் அதன் பின், ஈசிஆரில் உள்ள ஸ்டூடியோ ஒன்றிற்கு மாறலாம் என்றும் சொல்கின்றனர்.

முதல் பாகத்தில் வில்லன் வர்மா (விநாயகன்) செம கெத்து காட்டியிருப்பார். அதில் அவரை பழி தீர்ப்பார் ஜெயிலர் முத்துவேல் பாண்டியன். அதில் வர்மா இறப்பதற்கு முன்னால், ''நீ என்னை கொல்லலாம். ஆனால், எனக்கு பின்னால் வருபவர்களை ஒன்றும் செய்யமுடியாது' என்று ஒரு டயலாக்கை வீசியிருப்பார். அந்த ஒரு வார்த்தையில் இருந்து தான் இரண்டாம் பாகத்திற்கான கதை உருவாகியிருக்கலாம் என்ற பேச்சும் இருக்கிறது. நெல்சன் படம் என்றால் அனிருத் இல்லாமலா! மான்டேஜ் பாடல்களுக்கான தீம் மியூசிக் மற்றும் ஒரு பாடலை கொடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

``நான் என் வார்த்தைகளைத் திரும்பப் பெறப்போவத்தில்லை... "- சினிமா குறித்து குஷ்பு

நடிகை குஷ்பு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சினிமா சார்ந்த சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். இதுதொடர்பாகப் பேசியிருக்கும் அவர், "பெண்களை மையமாகக் கொண்ட படம் எப்போதுமே பிளாக்பஸ்டர் ஆகாது. நான் என் வார்... மேலும் பார்க்க

``தேசிய விருது கிடைக்கும்னு நினைச்சாரு, ஆனா..." - கலை இயக்குநர் மறைவு பற்றி இயக்குநர் பாரி இளவழகன்

'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்', 'ஜடா', 'குட் நைட்', போன்ற படங்களுக்கு கலை இயக்குநராகப் பணியாற்றிய ஶ்ரீகாந்த் உயிரிழந்திருக்கிறார்.பாரி இளவழகன் இயக்கி நடித்திருந்தத் திரைப்படம் 'ஜமா'. கடந்த வருடம் ஆகஸ... மேலும் பார்க்க

``ப்ரியா பவானி சங்கருக்கு அப்போல்லாம் திரைப்படங்கள்ல நடிக்கிற ஆசையில்ல'' - நடிகர் ஈஸ்வர்

`ஆபீஸ்', `கல்யாணப் பரிசு', `தேவதையைக் கண்டேன்' போன்ற சீரியல்களில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் ஈஸ்வர். அவரைச் சந்தித்து அவருடைய சின்னத்திரை அனுபவங்கள் தொடர்பாக பல விஷயங்களைப் பேசி... மேலும் பார்க்க

Soundariya: `நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல!' - ஆந்திராவில் மோகன் பாபு மீது ஒருவர் புகார்!

நடிகை செளதர்யா ஏப்ரல் 17, 2004-ம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தார். ஆனால், 22 வருடங்களுக்குப் பிறகு தற்போது நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல, அது கொலை என ஆந்திராவைச் சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் ... மேலும் பார்க்க

Priyanka Chopra: ``நான் முதலில் பயந்தேன்; ஆனால், விஜய் அன்பாக நடந்து கொண்டார்!'' - மது சோப்ரா

நடிகை ப்ரியங்கா சோப்ரா விஜய்யுடனான `தமிழன்' திரைப்படத்தின் மூலமாகத்தான் நடிப்பிற்கு அறிமுகமானார். ப்ரியங்கா சோப்ரா நடித்த ஒரே திரைப்படம் இது மட்டும்தான். இத்திரைப்படத்திற்குப் பிறகு பாலிவுட்டில் அதிகம... மேலும் பார்க்க

Murmur Review: `Found Footage' முயற்சி ஓகே; ஆனால் இது ஒரு மர்மமான சினிமா அவஸ்தை!

ஜவ்வாது மலையில் ஒரு காடு. அதில் சூனியக்காரி ஆவி ஒன்று இருக்கிறதாம். அங்கேயே கன்னிமார் எனப்படும் நாட்டார் தெய்வங்களும் உலாவுகிறார்களாம். அதை ஆவணப்படுத்த நான்கு பேர் கொண்ட குழு ஒன்று செல்கிறது. அவர்களுக... மேலும் பார்க்க