செய்திகள் :

``தேசிய விருது கிடைக்கும்னு நினைச்சாரு, ஆனா..." - கலை இயக்குநர் மறைவு பற்றி இயக்குநர் பாரி இளவழகன்

post image

'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்', 'ஜடா', 'குட் நைட்', போன்ற படங்களுக்கு கலை இயக்குநராகப் பணியாற்றிய ஶ்ரீகாந்த் உயிரிழந்திருக்கிறார்.

பாரி இளவழகன் இயக்கி நடித்திருந்தத் திரைப்படம் 'ஜமா'. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இந்தத் திரைப்படம் வெளியானது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஶ்ரீகாந்த் தான் இந்தப் படத்திற்கு கலை இயக்குநராகப் பணியாற்றி இருந்தார். இந்நிலையில் நேற்று கலை இயக்குநர் ஶ்ரீகாந்த் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்.

ஶ்ரீகாந்த்

அவரின் திடீர் மறைவு திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அவருடன் இணைந்து பணியாற்றிய `ஜமா' திரைப்படத்தின் இயக்குநர் பாரி இளவழகனைத் தொடர்புகொண்டு பேசினோம். "அவருக்கு மூன்றாவது முறையாக மாரடைப்பு வந்திருக்கிறது. இரண்டு நாள்களாக ICU-வில் வைத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு அவருக்கு மாரடைப்புப் பிரச்னை இருக்கிறது என்று எங்களிடம் சொன்னதில்லை.

எங்களுக்கும் இதுப்பற்றி தெரியாது. ஆனால் மிகவும் ஆரோக்கியமாக இருக்கக்கூடிய நபர்தான். எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. ரொம்ப அமைதியாக இருப்பார். அதிகமாகப் பேசமாட்டார். மிகவும் சின்சியராக வேலை செய்யக்கூடியவர். உதவி கலை இயக்குநர்கள் இருந்தாலும் அவரே அந்த வேலையைச் சிரமம் பார்க்காமல் செய்வார்.

பாரி இளவழகன்

'ஜமா' படத்திற்கு முழு ஆன்மாவையும் கொடுத்து வேலை செய்தார். எப்படியாவது தேசிய விருது கிடைத்துவிடும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையும் இருந்தது. அவருடைய சொந்த ஊர் மேட்டூர் அவரது உடல் அங்கு எடுத்துசெல்லப்பட்டிருக்கிறது. என்னுடைய இரங்கலை அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

``நான் என் வார்த்தைகளைத் திரும்பப் பெறப்போவத்தில்லை... "- சினிமா குறித்து குஷ்பு

நடிகை குஷ்பு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சினிமா சார்ந்த சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். இதுதொடர்பாகப் பேசியிருக்கும் அவர், "பெண்களை மையமாகக் கொண்ட படம் எப்போதுமே பிளாக்பஸ்டர் ஆகாது. நான் என் வார்... மேலும் பார்க்க

Jailer 2: இணைகிறாரா மாஸ் ஹீரோ? பட்டை தீட்டப்பட்ட ஃபார்முலா; படத்தின் கதை இது தானா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் கூட்டணியின் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடந்துவருகிறது. 'கூலி' படப்பிடிப்பில் தனது போர்ஷனை முடித்துக்கொடுத்துவிட்ட வேகத்தில், அடுத்த பட... மேலும் பார்க்க

``ப்ரியா பவானி சங்கருக்கு அப்போல்லாம் திரைப்படங்கள்ல நடிக்கிற ஆசையில்ல'' - நடிகர் ஈஸ்வர்

`ஆபீஸ்', `கல்யாணப் பரிசு', `தேவதையைக் கண்டேன்' போன்ற சீரியல்களில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் ஈஸ்வர். அவரைச் சந்தித்து அவருடைய சின்னத்திரை அனுபவங்கள் தொடர்பாக பல விஷயங்களைப் பேசி... மேலும் பார்க்க

Soundariya: `நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல!' - ஆந்திராவில் மோகன் பாபு மீது ஒருவர் புகார்!

நடிகை செளதர்யா ஏப்ரல் 17, 2004-ம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தார். ஆனால், 22 வருடங்களுக்குப் பிறகு தற்போது நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல, அது கொலை என ஆந்திராவைச் சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் ... மேலும் பார்க்க

Priyanka Chopra: ``நான் முதலில் பயந்தேன்; ஆனால், விஜய் அன்பாக நடந்து கொண்டார்!'' - மது சோப்ரா

நடிகை ப்ரியங்கா சோப்ரா விஜய்யுடனான `தமிழன்' திரைப்படத்தின் மூலமாகத்தான் நடிப்பிற்கு அறிமுகமானார். ப்ரியங்கா சோப்ரா நடித்த ஒரே திரைப்படம் இது மட்டும்தான். இத்திரைப்படத்திற்குப் பிறகு பாலிவுட்டில் அதிகம... மேலும் பார்க்க

Murmur Review: `Found Footage' முயற்சி ஓகே; ஆனால் இது ஒரு மர்மமான சினிமா அவஸ்தை!

ஜவ்வாது மலையில் ஒரு காடு. அதில் சூனியக்காரி ஆவி ஒன்று இருக்கிறதாம். அங்கேயே கன்னிமார் எனப்படும் நாட்டார் தெய்வங்களும் உலாவுகிறார்களாம். அதை ஆவணப்படுத்த நான்கு பேர் கொண்ட குழு ஒன்று செல்கிறது. அவர்களுக... மேலும் பார்க்க