செய்திகள் :

100 நாள் வேலை திட்ட நிதி முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: சிவ்ராஜ் சிங் சௌஹான்

post image

புது தில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு (100 நாள் வேலை திட்டம்) ஒதுக்கப்படும் நிதியை முறைகேடாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ஊரக வளா்ச்சி மற்றும் வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி முறைகேடாக பயன்படுத்துவதாக சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) எம்.பி. ஹா்சிம்ரத் கௌா் பாதல் மக்களவையில் குற்றஞ்சாட்டினாா்.

பஞ்சாயத்துகளுக்கு பதிலாக மாநில அரசுகள் மூலம் இத்திட்டத்துக்கான நிதி வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதற்கு பதிலளித்த சிவராஜ் சிங் சௌஹான், ‘100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை முறைகேடாக பயன்படுத்தினாலோ அல்லது விதிகளுக்குப் புறம்பாக நடந்து கொண்டாலோ, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு கண்காணிப்புக் குழுக்களை அனுப்பி, விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தாா்.

இந்தியாவின் முக்கியக் கூட்டாளி மோரீஷஸ்: பிரதமர் மோடி

மோரீஷஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசுமுறை பயணத்தின்போது, 8 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.மோரீஷஸ் நாட்டுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமா் நரேந்திர மோடி சென்றிருக்கிறார். இந்த சந்திப்பி... மேலும் பார்க்க

மியான்மர் ஆன்லைன் மோசடி மையங்களில் இருந்து 549 இந்தியர்கள் மீட்பு!

தாய்லாந்து - மியான்மர் எல்லையில் ஆன்லைன் மோசடி மையங்களில் சிக்கி விடுவிக்கப்பட்ட 549 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இளைஞர... மேலும் பார்க்க

3 நாள் சுற்றுப்பயணமாக அஸ்ஸாம் செல்கிறார் அமித் ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் 14ல் மூன்று நாள் பயணமாக அஸ்ஸாம் செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். கோக்ரஜாரில் உள்ள அனைத்து போடோ மாணவர் சங்கத்தின் வருடாந்திர மாநாட்டில்... மேலும் பார்க்க

வரியில்லாத புதுச்சேரி பட்ஜெட்: முதல்வர் என். ரங்கசாமி

புதுச்சேரியின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் என். ரங்கசாமி புதன்கிழமையில் சட்டப்பேரவையில் சமர்ப்பித்தார். இந்த ரூ. 13,600 கோடி பட்ஜெட்டை வரியில்லாத பட்ஜெட் என்றும் கூறினார்.மேலும... மேலும் பார்க்க

மருத்துவமனையில் இருந்து ஜகதீப் தன்கர் டிஸ்சார்ஜ்!

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் (73) புதன்கிழமை காலை வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.திடீர் நெஞ்சு வலி காரணமாக மார்ச் 9-ஆம் தேதி நள்... மேலும் பார்க்க

எலான் மஸ்க்குடன் ஒப்பந்தம்: ஏர்டெல், ஜியோ பங்குகள் உயர்வு!

ஸ்பேஸ்எக்ஸ் ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் பங்குகளின் விலை அதிகரித்துள்ளன.அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸுக்கு சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள், சர்வதேச அள... மேலும் பார்க்க