செய்திகள் :

எலான் மஸ்க்குடன் ஒப்பந்தம்: ஏர்டெல், ஜியோ பங்குகள் உயர்வு!

post image

ஸ்பேஸ்எக்ஸ் ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் பங்குகளின் விலை அதிகரித்துள்ளன.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸுக்கு சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள், சர்வதேச அளவில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இணைய சேவையை இந்தியாவுக்குள் அறிமுகம் செய்வதற்கான முயற்சியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஈடுபட்டுள்ளார்.

தற்போது முதல் நிறுவனமாக ஏர்டெல் நிறுவனத்துடன் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் ஒப்பந்தம் செய்துள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியானதனைத் தொடர்ந்து, ஜியோவும் ஸ்டார்லிங்கின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த இரு நிறுவனங்களும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, இரு நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்துள்ளன. தேசியப் பங்குச்சந்தையில் ஏர்டெல்லின் பங்கு விலை 5.49 சதவிகிதம் உயர்ந்து, ரூ. 1,388.25-ஆக அதிகரித்தது. இருப்பினும், மும்பை பங்குச்சந்தையில் 0.49 சதவிகிதம் சரிவுடன் ரூ. 1,653.05-ஆக மாறியது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகளும், தேசியப் பங்குச்சந்தையில் ரூ. 1,242.50 என்ற நிலையிலிருந்து, 1.3 சதவீதம் உயர்ந்து ரூ. 1,263-ஆக அதிகரித்தது. மும்பை பங்குச்சந்தையில் 1.13 சதவிகிதம் உயர்ந்து, ரூ. 1,261.55 என்பதிலிருந்து ரூ. 1,242.50-ஆக மாறியது.

இதனிடையே, டிசம்பர் மாதம் 17.15 லட்சம் சந்தாதாரர்களை இழந்த வோடபோன் ஐடியாவின் பங்குகள், புதன்கிழமை பங்குச் சந்தையில் 6 சதவிகிதம் சரிந்தன.

இந்தியாவில் மொத்த தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை, கடந்த நவம்பரில் 1,187.15 மில்லியன் என்ற எண்ணிக்கையில் இருந்து, டிசம்பரில் 1,189.92 மில்லியனாக அதிகரித்ததாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தெரிவித்தது.

அவற்றில் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் 476.58 மில்லியன் பிராட்பேன்ட் சந்தாதாரர்களுடன் முன்னிலையிலும், அதனைத் தொடர்ந்து ஏர்டெல் 289.31 மில்லியன் சந்ததாரர்களுடனும், வோடபோன் ஐடியா 126.38 மில்லியன் சந்தாதாரர்களையும் பெற்றுள்ளனர்.

நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.61% ஆக சரிவு!

நாட்டின் சில்லறை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து பிப்ரவரியில் 3.61 சதவீதமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 சதவீதத்துக்கும் கீழாக சரிந்துள்ளது இதுவே முதல்முறையாகும். மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: தார்பாயால் மசூதிகளை மூட காவல்துறை உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 10 மசூதிகளை தார்பாயால் மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக நடைபெறும் நிகழ்வாக ஹிந்துக்கள் கொண்டாடும் ஹோலி பண்டி... மேலும் பார்க்க

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு: யோகி ஆதித்யநாத்

ஹோலி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமரின் உஜ்வாலா யோஜனாவின் கீழுள்ள பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். லக்னௌவில் நடந்த மானி... மேலும் பார்க்க

தில்லி ஆளுநருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறும் புதிய பாஜக அரசு?

தில்லி ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு எதிரான வழக்குகளை தில்லியின் புதிய பாஜக அரசு வாபஸ் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தில்லியில் 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோ... மேலும் பார்க்க

நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்கும் மோடி: பிரகலாத் ஜோஷி

80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்க முன்முயற்சி எடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு மார்... மேலும் பார்க்க

நடிகை செளந்தர்யா மரணம் விபத்தல்ல, திட்டமிட்ட கொலை: மோகன் பாபு மீது புகார்!

நடிகை செளந்தர்யா சென்ற விமானம் வெடித்தது விபத்தல்ல, திட்டமிட்ட கொலையாக இருக்கக்கூடும் என்று கம்மம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.மேலும், செளந்தர்யா விமானம் வெடித்த சம்பவத்தி... மேலும் பார்க்க