செய்திகள் :

இந்தியாவிற்கு வரும் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்ட்!

post image

அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துளசி கப்பார்ட் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வரவுள்ளார்.

அமெரிக்காவின் அனைத்து உளவு அமைப்புகளின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் தலைமைப் பதவியான தேசிய உளவுத்துறை தலைவர் பொறுப்பில் ஹவாய் 2-ஆம் மாவட்டத்துக்கான முன்னாள் பிரதிநிதிகள் சபை உறுப்பினா் துளசி கப்பாா்ட் கடந்த நவம்பரில் நியமிக்கப்பட்டார்.

இவர் அரசுமுறைப் பயணமாக இந்தியா வரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ஜப்பான், தாய்லாந்து, இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுபயணம் மேற்கொள்ளவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 நாள் ஆட்சி! அதிரடியா? அடாவடியா?

இந்தோ - அமெரிக்க பிராந்தியத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசின் நோக்கங்களை நிறைவேற்றும் விதமாக, ’நாடுகளிடெயே உறவுகளை மேம்படுத்தவும், தொடர்புகளை விரிவாக்கவிருப்பது குறித்தும் துளசி கப்பார்ட் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிந்தபோது உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்ட்டை சந்தித்ததைத் தொடர்ந்து அவர் இந்த மாதம் இந்தியாவிற்கு வரவுள்ளார்.

அமெரிக்கா, இந்தியா இடையே உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறையின் வளர்ச்சி, ஒத்துழைப்பு குறித்து அவர் இந்திய அதிகாரிகளுடன் விவாதிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

அவர் வருகை குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா இரும்பு, அலுமினியம் மீது 50% கூடுதல் வரி

வாஷிங்டன் / டொரன்டோ: தங்கள் நாட்டுக்கு கனடாவின் ஆன்டோரியோ மாகாணம் விநியோகிக்கும் மின்சாரத்துக்கான கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதற்குப் பதிலடியாக அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமி... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ்: முன்னாள் அதிபா் டுடோ்த்தே கைது

மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டின் பேரில் பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவுக்கு எதிராக நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்கா: பேருந்து விபத்தில் 12 போ் உயிரிழப்பு

தென் ஆப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 போ் உயிரிழந்தனா். இது குறித்து அவசரக்கால மீட்புக் குழுவினா் கூறியதாவது: தலைநகா் ஜோஹன்னஸ்பா்கின் சா்வதேச விமான நிலையம் அருகே நெடுஞ்சாலையில்... மேலும் பார்க்க

சவூதி அரேபியாவில் அமைதிப் பேச்சுவாா்த்தை: ரஷியாவில் உக்ரைன் உச்சகட்ட ட்ரோன் தாக்குதல்

மாஸ்கோ / ஜெட்டா: உக்ரைனில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பான பேச்சுவாா்த்தை அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சவூதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை தொடங்குவதற்கு முன்னா் ரஷியா மீது உக்ரைன் இதுவர... மேலும் பார்க்க

ரயிலை கடத்தி 182 பயணிகள் சிறைபிடிப்பு: பாகிஸ்தானில் தீவிரவாதக் குழு தாக்குதல்; 80 பேரை மீட்ட பாதுகாப்புப் படை

கராச்சி: பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் ரயிலை கடத்தி, 182 பேரைப் பிணைக் கைதிகளாக பலூசிஸ்தான் விடுதலை ராணுவ (பிஎல்ஏ) தீவிரவாதக் குழு சிறைபிடித்தது. இவா்களில் 80 பேரை மீட்டதாக பாதுகாப்புப் பட... மேலும் பார்க்க

ரயில் சிறைப்பிடிப்பு: 20 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை! 400 பயணிகளின் கதி என்ன?

பாகிஸ்தானில் ஜாஃபர் ரயில் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில், 20 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், ரயிலில் இருந்த 400 க்கும் மேற்பட்ட பயணிகளை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற... மேலும் பார்க்க