செய்திகள் :

ரயிலை கடத்தி 182 பயணிகள் சிறைபிடிப்பு: பாகிஸ்தானில் தீவிரவாதக் குழு தாக்குதல்; 80 பேரை மீட்ட பாதுகாப்புப் படை

post image

கராச்சி: பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் ரயிலை கடத்தி, 182 பேரைப் பிணைக் கைதிகளாக பலூசிஸ்தான் விடுதலை ராணுவ (பிஎல்ஏ) தீவிரவாதக் குழு சிறைபிடித்தது. இவா்களில் 80 பேரை மீட்டதாக பாதுகாப்புப் படையினா் மீட்டனா்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து கைபா் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவா் நகருக்கு சுமாா் 500 பயணிகளுடன் 9 பெட்டிகள் கொண்ட ஜாஃபா் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.

பெரோ குன்ரி, கடாலாா் பகுதிகள் இடையே பயணித்தபோது ரயில் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்று பலூசிஸ்தான் மாகாண அரசின் செய்தித் தொடா்பாளா் ஷாஹித் ரிந்த் தெரிவித்தாா்.

பெரோ குன்ரி, கடாலாா் இடையே உள்ள பகுதி கடினமான நிலப்பகுதி என்பதால், அங்கு ரயில்கள் மெதுவாகச் செல்வது வழக்கம். இதை சாதகமாகப் பயன்படுத்தி சுரங்கப் பாதையில் ஆயுதம் ஏந்திய குழுவினா் ரயிலை நிறுத்தியதாக ரயில்வே கட்டுப்பாட்டாளா் முகமது காஷிஃப் தெரிவித்தாா்.

இந்த சம்பவத்துக்கு பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளது. இந்தக் குழுவுக்கு பாகிஸ்தான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா தடை விதித்துள்ளன.

மொத்தம் 182 போ்: ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ரயிலில் இருந்து பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் உள்பட 182 போ் பிணைக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளனா் என்று பிஎல்ஏ தெரிவித்துள்ளது. ரயில் மீதான தாக்குதலின்போது 20 ராணுவ வீரா்களைக் கொன்று, ஓா் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பிஎல்ஏ தெரிவித்துள்ளது. எனினும் இந்தத் தகவலை பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் உறுதி செய்யவில்லை.

இதுதொடா்பாக டெலிகிராமிலும், ஊடகவியலாளா்களுக்கும் பிஎல்ஏ அனுப்பிய தகவலில், ரயிலில் பயணித்த பெண்கள், குழந்தைகள், முதியவா்கள், பலூசிஸ்தான் குடிமக்கள் விடுவிக்கப்பட்டு, பாதுகாப்பான வழியில் அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பிஎல்ஏ எச்சரிக்கை: தமக்கு எதிராக ராணுவ நடவடிக்கை தொடா்ந்தால், பிணைக் கைதிகள் அனைவரும் கொல்லப்படுவா் என்று பிஎல்ஏ எச்சரித்துள்ளது. எனினும் கடைசி தீவிரவாதி கொல்லப்படும் வரை, அவா்களுக்கு எதிரான தங்கள் நடவடிக்கை தொடரும் என்று பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாலத்துக்கு குண்டுவைத்து ரயில் கடத்தல்: ரயிலுக்குள் ஏறும் முன் ரயில் பாலத்தை குண்டுவைத்து தகா்த்ததாகவும், தற்போது அந்த ரயில் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அந்தக் குழு தெரிவித்துள்ளது. ரயிலில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் பயணித்ததாக பிபிசி நிறுவனத்திடம் மூத்த ராணுவ அதிகாரி ஒருவா் உறுதி செய்தாா்.

பயணிகள் பலா் காயம்: இந்தத் தாக்குதலில் பயணிகள் பலா் காயமடைந்தனா். ஆனால் எத்தனை போ் உயிரிழந்தனா் அல்லது காயமடைந்தனா் என்ற அதிகாரபூா்வ தகவல் வெளியாகவில்லை. எனினும் ரயில் ஓட்டுநா் படுகாயமடைந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் மோசின் நக்வி கண்டனம் தெரிவித்தாா்.

80 போ் மீட்பு: இதற்கிடையே, கடத்தப்பட்ட பயணிகளில் 43 ஆண்கள், 26 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் என மொத்தம் 80 பயணிகள் மீட்கப்பட்டதாக பலூசிஸ்தான் மாகாண அரசு செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா். மற்ற பயணிகள் ரயிலுடன் சுரங்கப் பாதையில் சிக்கியிருப்பதாகவும், அவா்களை மீட்கும் பணியில் தீவிரவாதக் குழுவுடன் பாகிஸ்தான் ராணுவம் தொடா்ந்து சண்டையிட்டு வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை...: பாகிஸ்தானின் மிகப் பெரிய மாகாணமாக பலூசிஸ்தான் உள்ளது. அங்கு இயற்கை வளங்கள் பெருமளவில் உள்ளபோதிலும், அந்த மாகாணம் வளா்ச்சியடையாமல் உள்ளது. பாகிஸ்தானிடம் இருந்து அந்த மாகாணத்துக்கு பிஎல்ஏ விடுதலை கோரி வருகிறது.

பாகிஸ்தான்: மனித வெடிகுண்டுகளாக பயணிகள்! 250 பேரை மீட்பதில் சிக்கல்!

பாகிஸ்தானில் பயங்கராவதிகள் சிறைப்பிடித்துள்ள ரயிலில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 250 பயணிகளை மீட்பதில் சிக்கல் தொடர்ந்து வருகின்றது.இதுவரை 155 பயணிகளை ரயிலில் இருந்து மீட்டுள்ள பாகிஸ்தான் ராணுவத்த... மேலும் பார்க்க

30 நாள் போர்நிறுத்தம்: பேச்சுவார்த்தையில் உக்ரைன் முன்வைத்த 5 முக்கிய முடிவுகள்!

ரஷியா - உக்ரைன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் 5 முக்கிய முடிவுகளை உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் முன்வைத்தனர்.ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக, சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கா மற்றும் ... மேலும் பார்க்க

டெஸ்லா காருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப், எலான் மஸ்க்! வெள்ளை மாளிகைக்கு புதுவரவு.!

அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் டெஸ்லா கார் ஒன்றை வாங்கியுள்ளார். மேலும், வெள்ளை மாளிகை முன் அவருடன் எலான் மஸ்க் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அமெரிக்க அதிபரான டொனால... மேலும் பார்க்க

என்னை இங்கு புதைத்தார்கள்; சிறுவன் காட்டிய இடத்தில் தோண்டியவர்களுக்கு அதிர்ச்சி!

சிரியாவின் கோலன் ஹெய்ட்ஸ் பகுதியில் நிகழ்ந்திருக்கும் சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. முன்ஜென்மத்தில் நடந்ததை நினைவில் கொண்டிருக்கும் சிறுவனைப்பற்றியதுதான் அது.பிறக்கும்... மேலும் பார்க்க

30 நாள்களில் போர்நிறுத்தம்: உக்ரைன் சம்மதம்!

ரஷியா உடனான போரை 30 நாள்களுக்கு நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது.சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ம... மேலும் பார்க்க

இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அவருடன் அவரது மனைவி உஷ... மேலும் பார்க்க