செய்திகள் :

மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் செல்வோர்.. இந்தத் தவறை செய்ய வேண்டாம்!

post image

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு எப்போதும் கட்டுக்கடங்காத கூட்டம், அம்மனை தரிசித்து அருள் பெற நாள் முழுவதும் கூட காத்திருப்பது வழக்கம்.

பலரும், தங்களது பிரார்த்தனைகளை முன்வைத்தும், பிரார்த்தனை நிறைவேறியதும் மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று வேண்டிக்கொள்வது வழக்கம். வேண்டியது கொடுக்கும் மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்பவர்கள் ஒன்றை மட்டும் மறந்து விடுகிறார்கள்.

அதாவது, அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில் மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலின் அருகில் அமைந்துள்ளது. எப்போது காமாட்சி அம்மனை தரிசிக்கச் சென்றனாலும், அருகில் உள்ள வெள்ளீஸ்வரரையும் தரிசித்து வர வேண்டும்.

அருள்மிகு வெள்ளீஸ்வரருக்கு பார்கவேஸ்வரர் என்ற வேறு திருநாமமும் உண்டு. இத்திருத்தலத்தில் கண்பார்வை இழந்து சிவனை வேண்டியாகம் செய்த சுக்கிராச்சாரியாருக்கு சிவபெருமான் பார்வை தந்து காட்சி அளித்துள்ளார்.

எனவே, இத்தலம் சுக்கிர ஸ்தலமாகவும் உள்ளது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம் சுக்கிராச்சாரியார் இங்கு வழிபட்டதால் இப்பெயர் பெற்றது. ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மாங்காடு ஸ்ரீ வெள்ளீஸ்வரர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ வைகுண்டப்பெருமாள் திருக்கோயிலிலும் தரிசனம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் இந்த மூன்று கோயில்களும் ஸ்ரீ காமாட்சி அம்மனின் வரலாற்றுடன் ஒன்றோடொன்று தொடர்புடையவை.

இத்திருக்கோயிலில், ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ விசாலாட்சி, ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ வீரபத்திரர் சன்னதி , ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ வள்ளி மற்றும் ஸ்ரீ தெய்வானை, ஸ்ரீ கால சம்ஹாரமூர்த்தி மற்றும் ஸ்ரீ பாலாம்பிகை , ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.

சென்னையிலுள்ள நவகிரக ஸ்தலங்களில் சுக்ர ஸ்தலமாக இந்த வெள்ளீஸ்வரர் கோயில் விளங்குகிறது. இத்திருக்கோயில் செல்வம், செழிப்பு, நல்ல குடும்பம், வாகனங்கள், புகழ், சமூக அந்தஸ்து ஆகியவற்றுடன் மக்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ சுக்ர ஸ்தலமாகும்.

காமாட்சி அம்மன் கோயில் குளத்தின் அருகிலேயே இந்த கோயில் அமைந்துள்ளது. காமாட்சி அம்மன் கோயிலில் சிவன் சன்னதி இல்லை. அதுபோல வெள்ளீஸ்வரர் கோயிலிலும் தனியாக அம்மன் சன்னதி இல்லாமல், வெள்ளீஸ்வரரை வழிபட்ட அம்மன் பாதம் மட்டுமே இருக்கிறது. எனவே, காமாட்சி அம்மனை வழிபடும் பக்தர்கள். அருகில் உள்ள வெள்ளீஸ்வரரையும் வழிபட்டு இறைவன் அருள் பெரலாம் என்று கூறப்படுகிறது.

அரக்கனை வீழ்த்தினார்களா அஷ்ட காளிகள்? சுழல் - 2 விமர்சனம்!

‘ஓரம் போ’, ‘வ குவாட்டர் கட்டிங்’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட தனித்துவமான களத்தில் திரைக்கதை அமைத்து வெற்றி பெற்ற இயக்குநர்களான இணையர்கள் புஷ்கர் - காயத்ரி எழுத்தில் உருவாகியிருக்கிறது ‘சுழல் - 2’ தொடர்.ச... மேலும் பார்க்க

மாசி பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்!

மாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்திப் பெற்றது. இங்குள்ள 14 கி.மீ தொலைவு கிரிவலப் பாதையை... மேலும் பார்க்க

ஓடிடியில் சம்யுக்தா விஜயனின் நீல நிறச் சூரியன்!

சம்யுக்தா விஜயனின் நீல நிறச் சூரியன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இயக்குநர் சம்யுக்தா விஜயன் எழுதி இயக்கி தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் நீல நிறச் சூரியன். ... மேலும் பார்க்க

சக்தித் திருமகன் டீசர்!

நடிகர் விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால்,... மேலும் பார்க்க

நடிகை சௌந்தர்யா மரணம் குறித்து சர்ச்சை: கணவர் ரகு விளக்கம்

நடிகை சௌந்தர்யா மரணம் விபத்தல்ல என்றும், திட்டமிட்ட கொலைதான் என்றும் புகார் அளிக்கப்பட்டிருப்பது குறித்து, அவரது கணவர் ரகு விளக்கம் கொடுத்துள்ளார்.நடிகை சௌந்தர்யாவுக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை, நட... மேலும் பார்க்க

25 ஆண்டுகளுக்குப் பிறகு.... மீண்டும் நடிக்கும் பூவே உனக்காக சங்கீதா!

25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் சங்கீதா நடிக்கிறார்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை சங்கீதா. இவர் ஸ்நேகிதன் ஒரு ப... மேலும் பார்க்க