செய்திகள் :

Health: பேரு தான் சின்ன வெங்காயம்... பலன்கள் அப்பப்பா..!

post image

தினமும் சாப்பிடவேண்டிய காய்கறிகளில் சின்ன வெங்காயத்துக்குத்தான் முதல் இடம். ஆனால், உரிக்க சோம்பல்பட்டு பலரும் பெரிய வெங்காயத்தையே நாடுகின்றனர். உணவில் ருசியைக் கூட்டி, வாசனையைச் சேர்க்கும் சின்ன வெங்காயம் அதிக மருத்துவக் குணங்களைக்கொண்டது என்கிறார் வேலூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் டாக்டர் ச. இளங்கோ.

சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை நெய் அல்லது எண்ணெயில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் இருக்கலாம்.

உடல் சூட்டைக் குறைக்கவல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம். உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழப்பட்டு இருந்தால், இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது.

கல்லீரலில் இருக்கும் பித்தத் திரவம் அதிகமாக சுரந்தால், காமாலை வரும். இந்த பித்தத் திரவத்தை இயல்பான நிலையில் சுரக்க வைப்பது சின்ன வெங்காயம்.

சின்ன வெங்காயம்

வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல், கண் நோய் போன்ற பாதிப்பிலிருந்து விடுபட, தினமும் உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பது அவசியம்.

அம்மை நோய் வராமல் தடுக்கவும் வந்தால் சீக்கிரம் குணமாகவும் சின்ன வெங்காயம் உதவுகிறது. ஆண் பிள்ளைகளுக்கு அம்மை வந்தால், அதன் பிறகு இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்க அம்மை ஏற்பட்ட நாளில் இருந்து மூன்று மாதங்கள் சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்துவந்தால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Kharge: மாநிலங்களவையில் மன்னிப்பு கேட்ட கார்கே.. விரக்தியில் போட்ட பதிவு!

'தேசிய கல்வி கொள்கை' - தற்போதைய மக்களவை, மாநிலங்களவையின் ஹாட் டாப்பிக். கடந்த திங்கட்கிழமையில் இருந்து நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. தேசிய கல்வி கொள்கை திட்டம், இந்தி திணிப்பு எதிர்ப்ப... மேலும் பார்க்க

Kerala CM: கவர்னருடன் டெல்லி சென்று கேரளாவுக்கு நிதி கேட்ட பினராயி விஜயன்... வியக்க வைத்த நிகழ்வு!

கேரள முதல்வர் - கவர்னர் நட்பு: கேரள கவர்னராக இருந்த ஆரிப் முஹம்மதுகான் முதல்வர் பினராயி விஜயனுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் 5 ஆண்டுகளாக கவர்னராக இருந்த நிலையில் பஞ்சாப் கவர்னராக நியமிக... மேலும் பார்க்க

NEP: ``உண்மைகளைத் திரிப்பதை நிறுத்துங்கள்'' - தர்மேந்திர பிரதானை சாடிய கனிமொழி

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக திமுகவிற்கும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிற்கும் மோதல் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. நேற்று (மார்ச் 12) தர்மேந்திர பிரதான் பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு ஏற்றுக்கொண்டதாக த... மேலும் பார்க்க

Nilgiris: ``பலா மரங்களை தேடி வரும் யானைகளுக்கு என்ன பதில் சொல்வோம்..'' -வேதனையில் பழங்குடிகள்

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலம் என்றாலும் மரங்களை வெட்டுவதற்கு தடைகளும் கட்டுப்பாடுகளும் நடைமுறையில் உள்ளன. குடியிருப்பு அல்லது சாலையில் விழும் நிலையில் ... மேலும் பார்க்க

Pakistan: ரயிலைக் கடத்திய பலூச்சிகள் யார்? அவர்களுக்கு இருக்கும் திராவிட தொடர்பு என்ன?

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை பலூச் விடுதலை படை (BLA) என்ற தீவிரவாத அமைப்பு நேற்று சிறைபிடித்தது. ரயில் ஓட்டுநர் காயமடைந்த நிலையில், அதில் பயணம் செய்த 30 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளது. 500... மேலும் பார்க்க

``பிரதான் திமிராக பேசுகிறார், பிளாக்மெயில் செய்கிறார், ஆனால்.." - முதல்வர் ஸ்டாலின் சொல்வதென்ன?

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1285 கோடியிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி இருக்கிறார். அடிக்கல் நாட்டு விழாவில் தேசிய கல்வி கொள்கைக் குறித்தும் தர்மேந்திர பிரதான் கு... மேலும் பார்க்க