செய்திகள் :

உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்து; ஒருவர் காயம்

post image

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்தானதில் ஒருவர் காயமடைந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூரில் மத்திய அரசைக் கண்டித்து, கண்டனப் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக பல்வேறு பிரம்மாண்ட ஏற்பாடுகளை திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்காக 25 அடி உயர ராட்சத கட்-அவுட்களையும் திமுகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் கட்-அவுட் ஒன்று சரிந்து விழுந்து விபத்தானது.

இதையும் படிக்க:நடிகை செளந்தர்யா மரணம் விபத்தல்ல, திட்டமிட்ட கொலை: மோகன் பாபு மீது புகார்!

இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சிக்கியதில், அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இதனையடுத்து, அனுமதியின்றி கட்-அவுட், \ஃபிளக்ஸ் வைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் சென்னை பள்ளிக்கரணையில் அதிமுகவினர் ஏற்பாடு செய்திருந்த கட்-அவுட் விழுந்து, விபத்தானதில் இளம்பெண் ஒருவர் பலியானதையடுத்து, திமுக நிகழ்ச்சிகளில் ஃபிளக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது என திமுக தலைமையும் உத்தரவிட்டிருந்தது.

தமிழக பட்ஜெட்: 100 இடங்களில் ஒளிபரப்ப ஏற்பாடு!

தமிழக பட்ஜெட் நாளை மறுநாள்(மார்ச் 14) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.தமிழக பட்ஜெட் நிகழ்வை மக்கள் அதிகமாக கூடும் சென்னை மெரீனா ... மேலும் பார்க்க

பெரியார் சர்ச்சை: மத்திய நிதி அமைச்சருக்கு எதிராக விஜய் கேள்வி!

பெரியார் விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”பெரிய... மேலும் பார்க்க

தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா? மு.க. ஸ்டாலின்

மாநில உரிமைகளைப் பறிக்கும் எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் வஞ்சிப்பது நியாயமா? எனக் கேட்ட அவர... மேலும் பார்க்க

கோவையில் காட்டெருமை தாக்கி வனக்காவலர் பலி!

கோவையில் காட்டெருமை தாக்கி வனக்காவலர் அசோக் குமார் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை தடாகம் வனப்பகுதி, தோலம்பாளையத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு எருமையை விரட்டும் பணியில் ... மேலும் பார்க்க

ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகம்: தமிழக அரசு விளக்கம்!

தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழ்... மேலும் பார்க்க

ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல்: டெண்டர் கோரியது தமிழக அரசு!

ரூ. 20,000 கோடி செலவில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழகத்தில் வீடுகள் உள்பட அனைத்து மின் இணைப்புகளிலும் மின்நுகர்வை துல்லியமாகக் கணக்கெடுக்கவும், ... மேலும் பார்க்க