செய்திகள் :

தமிழக பட்ஜெட்: 100 இடங்களில் ஒளிபரப்ப ஏற்பாடு!

post image

தமிழக பட்ஜெட் நாளை மறுநாள்(மார்ச் 14) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

தமிழக பட்ஜெட் நிகழ்வை மக்கள் அதிகமாக கூடும் சென்னை மெரீனா கடற்கரை, சென்னை சென்ட்ரல் ரயில் உள்ளிட்ட 100 இடங்களில் எல்இடி திரை அமைத்து ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மாா்ச் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும், முன்பண மானியக் கோரிக்கைகள், கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகளும் பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதையும் படிக்க: சென்னை: உணவகத்தின் லிஃப்ட் அறுந்து ஊழியர் பலி

மேலும், வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் தேதியை ஆய்வுக் குழுவே இறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நாமக்கல்: நரசிம்மர் கோயில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

நாமக்கல்: நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற தெப்பத் திருவிழாவில், நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சனேயர் உற்சவ மூர்த்திகளாக தெப்பத்தில் வலம் வந்தனர். திரளான பக்தர்கள் சுவாமியை கண்டு வழிபட்டனர்.நாமக்கல் நகரின... மேலும் பார்க்க

தமிழகத்தில் கோடை விடுமுறை எப்போது? வெளியான இறுதித் தேர்வு அட்டவணை!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.தற்போது 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: சென்னையில் மார்ச் 22-ல் மாநிலக் கட்சிகள் கூட்டம்!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் பல்வேறு மாநிலக் கட்சிகள் கலந்துக் கொள்ளும் கூட்டம் மார்ச் 22-ஆம் தேதி நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.”தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி, தென்ன... மேலும் பார்க்க

பெரியார் சர்ச்சை: மத்திய நிதி அமைச்சருக்கு எதிராக விஜய் கேள்வி!

பெரியார் விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”பெரிய... மேலும் பார்க்க

தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா? மு.க. ஸ்டாலின்

மாநில உரிமைகளைப் பறிக்கும் எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் வஞ்சிப்பது நியாயமா? எனக் கேட்ட அவர... மேலும் பார்க்க

கோவையில் காட்டெருமை தாக்கி வனக்காவலர் பலி!

கோவையில் காட்டெருமை தாக்கி வனக்காவலர் அசோக் குமார் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை தடாகம் வனப்பகுதி, தோலம்பாளையத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு எருமையை விரட்டும் பணியில் ... மேலும் பார்க்க