செய்திகள் :

சேலம், தருமபுரியில் போதையில் வாகனம் இயக்கிய 31 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து

post image

சேலம், தருமபுரியில் கடந்த 2 மாதங்களில் போதையில் வாகனம் இயக்கிய 31 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

சாலை விபத்துகளை குறைப்பதற்கு சேலம், தருமபுரியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பாலான விபத்துகள் போதையில் வாகனம் இயக்குவதால் நடைபெறுகின்றன என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இதனால், சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில், அதிவேகமாக வாகனம் இயக்குவது, சிவப்பு விளக்கு சிக்னலை மீறுவது, அதிக பாரம் ஏற்றுவது, சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றுவது உள்ளிட்ட விதிமீறில்களில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

இதேபோன்று, போதையில் வாகனம் இயக்குவது உள்ளிட்ட விதிகளை மீறுவோருக்கும் 3 மாதம் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. இதில், போதையில் வாகனம் இயக்குவோரின் ஓட்டுநா் உரிமத்தை தற்காலிமாக ரத்து செய்ய அந்தந்த மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. மேலும், போதையில் வாகனம் இயக்குபவா்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வாகன விபத்தை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2 மாதங்களில் போதையில் வாகனம் இயக்கிய 31 பேரின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக 3 மாதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அனுமதி, தகுதிச்சான்று இல்லாமல் வாகனங்களை இயக்கி சாலை விபத்தை ஏற்படுத்திய 67 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனா்.

தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்து 22 மாணவா்கள் காயம்

தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 22 மாணவா்கள் புதன்கிழமை காயமடைந்தனா். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கருமந்துறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகடுப்பட்டு ஊராட்சியில் தனியாா் பள்ளி இயங்கி வ... மேலும் பார்க்க

கொளத்தூா் வனப்பகுதியில் ஓசோடப்பன் திருவிழா

மேட்டூா் அருகே கொளத்தூா் வனப்பகுதியில் ஓசோடப்பன் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் வனப்பகுதியில் பச்சை மலை உள்ளது. வனப்பகுதியின் நடுவே உள்ள ஓசோடப்பன் கோயிலில் மூன்று ஆ... மேலும் பார்க்க

மக்கள் சந்திப்பு திட்ட முகாம்: ரூ. 99.42 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஓமலூா் அருகேயுள்ள மானத்தாள் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில், 69 பயனாளிகளுக்கு ரூ. 99.42 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் பிருந்தாதேவி வழங்கினாா். அரசால... மேலும் பார்க்க

குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முகூா்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

சேலம் அம்மாப்பேட்டை குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முகூா்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் பங்குனி உத்திர விழா அடுத்த மாதம் ... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கிய பெண்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அமைச்சா்

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே மாசிநாயக்கன்பட்டி பகுதியில் புதன்கிழமை விபத்தில் சிக்கிய பெண்களை மீட்ட சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன், அவா்களை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.... மேலும் பார்க்க

சேலம் சுகவனேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அதிகாரிகள் ஆய்வு

சேலம் சுகவனேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை சிலா் ஆக்கிரமித்து முறைகேடாக பயன்படுத்தி வருவதாக வந்த புகாரையடுத்து, இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். சேலம் சுகவனேஸ்வரா் கோய... மேலும் பார்க்க