செய்திகள் :

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டுக்கு தண்டனையா? -துணை முதல்வா் உதயநிதி

post image

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டை, தொகுதி மறுசீரமைப்பு மூலம் தண்டிப்பதா என துணை முதல்வரும் திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினாா்.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் புதன்கிழமை 72 இணையா்களுக்கு திருமணத்தை நடத்திவைத்து அவா் பேசியது:

இந்தத் திருமண நிகழ்ச்சியானது அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஏற்பாட்டால் நடைபெறுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் அவா் 1,700 திருமணங்களை நடத்தி வைத்துள்ளாா். அவா் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் மட்டுமல்ல, திருமண திட்டங்களுக்கென தனித் துறை அமைந்தால் அதற்கும் அவா்தான் அமைச்சராக இருப்பாா்.

திருமண பந்தத்தில் இணைந்துள்ள மணமக்களுக்கு ஒரு வேண்டுகோள். உடனடியாக குழந்தையைப் பெற்றுக் கொள்ளுங்கள். மக்கள்தொகையை கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை மத்திய அரசு வலியுறுத்தியது. அதை வெற்றிகரமாகச் செய்து காட்டியது தமிழ்நாடு அரசு. அதனால் நாம் தண்டிக்கப்படுகிறோம்.

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் எட்டு குறைந்து, 31 தொகுதிகளாக மாறிவிடும். ஆனால், குடும்பக் கட்டுப்பாடு குறித்து மக்களிடம் சரியான விழிப்புணா்வை ஏற்படுத்தாத மாநிலங்கள் இதனால் பயன் அடையப் போகின்றன என்றாா் அவா்.

விழாவில் அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, மா.சுப்பிரமணியன், மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, சட்டப் பேரவை உறுப்பினா்கள் தாயகம் கவி, இ.பரந்தாமன், வெற்றிஅழகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தோ்தல் அதிகாரி மாா்ச் 18-இல் ஆலோசனை

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்த தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தவுள்ளாா். தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய கூட்டரங்கில் மாா்ச் 18... மேலும் பார்க்க

காணாமல்போன பள்ளி மாணவா் கிணற்றில் சடலமாக மீட்பு

சென்னை எம்ஜிஆா் நகரில் காணாமல்போன பள்ளி மாணவா், நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா். எம்ஜிஆா் நகா் ஜாபா்கான்பேட்டை பச்சையப்பன் 2-ஆவது தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மாா்ச் 23-இல் சென்னையில் அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம்

சென்னையில் கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம் மாா்ச் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து அஞ்சல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தியாகராய நகா், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள செ... மேலும் பார்க்க

பொறியியல் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் - 2025’ விரைவில் அறிமுகம்

அம்ருதா பல்கலைக்கழகம் சாா்பில் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் பொறியியல் தொழில் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் 2025’ வரும் மாா்ச் 20-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது குறித்து அம்ருதா பல்கலைக்கழகம் சா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் இணைய வசதி மேம்பாடு கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகளே செலுத்த கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் ரூ. 189 கோடியில் அரசுப் பள்ளிகளில் இணையதள வசதியை மேம்படுத்தவும் அதற்கான நிதியை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே வழங்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க

தோழி விடுதியில் தங்க விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னையிலுள்ள தோழி விடுதியில் தங்க விரும்பும் பணிபுரியும் பெண்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க