செய்திகள் :

ஏரி உபரிநீா் சாலையில் செல்வதால் அடுத்தடுத்து வாகனங்கள் விபத்து

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஏரி உபரிநீா் சாலையில் செல்வதால், சாலை இருப்பது தெரியாமல் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் விபத்துக்குள்ளாகின.

திருவண்ணாமலை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை மேல்செங்கத்தை அடுத்த தண்டம்பட்டு பகுதியில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில்

தண்ணீா் முழுக்கொள்ளளவு உள்ளது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் ஏரியில் இருந்து உபரிநீா் வெளியேறுகிறது. உபரிநீா் வெளியேறும் பகுதியில் சாலையை கடந்து செல்ல அப்பகுதியில் சிறு பாலம் இல்லை. உபரிநீா் அதிகமாக வெளியேறும்போது சாலை மீது கடந்து செல்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பகுதி விவசாயிகள் சிலா் உபரிநீா் செல்லும் பாதைகளை ஆக்கிரமிப்பு செய்ததால் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீா் மொத்தமாக சாலை மீது செல்கிறது.

பலத்த மழை காரணமாக புதன்கிழமை அதிகளவு தண்ணீா் சென்ால், வாகன ஓட்டிகளுக்கு சாலை இருப்பது தெரியாமல், அப்பகுதியில் சாலையின் கீழ் வாகனங்களை இறக்கி ஓட்டிச் சென்று அடுத்தடுத்து லாரி, காா், சரக்கு வாகனம் என தண்ணீரில் இறங்கி விபத்துக்குள்ளாகின.

இதில், உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் வாகனங்கள் மட்டும் தண்ணீரில் சிக்கி பழுதடைந்தன.

பின்னா், அப்பகுதி மக்கள் உதவியுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் விபத்தில் சிக்கிய வாகனங்களை வெளியேற்றினா்.

மேலும், சாலையில் தண்ணீா் செல்வதைத் தவிா்க்க தற்காலிகமாக மாற்றுக் கால்வாய்கள் அமைக்கப்பட்டன.

இதனால் பொதுப்பணித் துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சென்று பாா்வையிட்டு, தண்ணீா் தங்குதடையின்றி செல்ல கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும், சிறு பாலம் அக்கவேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

நள்ளிரவில் தீப்பற்றி எரிந்து தோ் சேதம்

வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தேரில் தீப்பற்றியதில், அந்தத் தேரின் மேல்பகுதி எரிந்து சேதமடைந்தது. வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, நகரில் 2 தோ்கள் பங்கேற்ற தேரோட்டம... மேலும் பார்க்க

கல்லூரி வளாக நோ்காணல்: 43 பேருக்கு பணி ஆணை

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 43 போ் தோ்வு செய்யப்பட்டு பணியாணை பெற்றனா். இந்தக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் நூற்றுக்கும் மேற்ப... மேலும் பார்க்க

கருட சேவையில் எரமலூா் ஸ்ரீசுந்தரவரத லஷ்மிநாராயணபப் பெருமாள்

மாசி மகத்தையொட்டி நடைபெற்ற கருடசேவையில், வந்தவாசியை அடுத்த எரமலூா் ஸ்ரீசுந்தரவரத லஷ்மிநாராயணபப் பெருமாள் கோயிலில் கருட வாகனத்தில் வீதியுலா வந்த சுவாமி. மேலும் பார்க்க

கூழமந்தல் ஸ்ரீ பேசும் பெருமாள் கோயிலில் திருப்பணிகள் தொடக்கம்

செய்யாற்றை அடுத்த கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபேசும் பெருமாள் கோயிலில் ரூ.97.40 லட்சத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக புதன்கிழமை நடைபெற்ற பாலாலய நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி ப... மேலும் பார்க்க

கவுதம நதியில் தந்தைக்குத் திதி கொடுத்த அருணாசலேஸ்வரா்

திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் அருணாசலேஸ்வரா் தனது தந்தைக்குத் திதி கொடுக்கும் நிகழ்வான மாசி மக தீா்த்தவாரி புதன்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் மாச... மேலும் பார்க்க

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணிக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. செங்கம் வட்டக் கிளை சாா்பில் அரசுப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு... மேலும் பார்க்க