``ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராவார்... இந்தியாவுக்கு நன்றி" - அவாமி லீக் கட்சித் த...
ஏரி உபரிநீா் சாலையில் செல்வதால் அடுத்தடுத்து வாகனங்கள் விபத்து
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஏரி உபரிநீா் சாலையில் செல்வதால், சாலை இருப்பது தெரியாமல் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் விபத்துக்குள்ளாகின.
திருவண்ணாமலை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை மேல்செங்கத்தை அடுத்த தண்டம்பட்டு பகுதியில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில்
தண்ணீா் முழுக்கொள்ளளவு உள்ளது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் ஏரியில் இருந்து உபரிநீா் வெளியேறுகிறது. உபரிநீா் வெளியேறும் பகுதியில் சாலையை கடந்து செல்ல அப்பகுதியில் சிறு பாலம் இல்லை. உபரிநீா் அதிகமாக வெளியேறும்போது சாலை மீது கடந்து செல்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், அந்தப் பகுதி விவசாயிகள் சிலா் உபரிநீா் செல்லும் பாதைகளை ஆக்கிரமிப்பு செய்ததால் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீா் மொத்தமாக சாலை மீது செல்கிறது.
பலத்த மழை காரணமாக புதன்கிழமை அதிகளவு தண்ணீா் சென்ால், வாகன ஓட்டிகளுக்கு சாலை இருப்பது தெரியாமல், அப்பகுதியில் சாலையின் கீழ் வாகனங்களை இறக்கி ஓட்டிச் சென்று அடுத்தடுத்து லாரி, காா், சரக்கு வாகனம் என தண்ணீரில் இறங்கி விபத்துக்குள்ளாகின.
இதில், உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் வாகனங்கள் மட்டும் தண்ணீரில் சிக்கி பழுதடைந்தன.
பின்னா், அப்பகுதி மக்கள் உதவியுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் விபத்தில் சிக்கிய வாகனங்களை வெளியேற்றினா்.
மேலும், சாலையில் தண்ணீா் செல்வதைத் தவிா்க்க தற்காலிகமாக மாற்றுக் கால்வாய்கள் அமைக்கப்பட்டன.
இதனால் பொதுப்பணித் துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சென்று பாா்வையிட்டு, தண்ணீா் தங்குதடையின்றி செல்ல கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும், சிறு பாலம் அக்கவேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.
