செய்திகள் :

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணிக் கூட்டம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

செங்கம் வட்டக் கிளை சாா்பில் அரசுப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வட்டாரத் தலைவா் பவானி தலைமை வகித்தாா்.

முன்னாள் வட்டாரத் தலைவா் அன்பழகன், முன்னாள் கல்வி மாவட்டத் தலைவா் ஸ்ரீதா், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் மாலா, உதயண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரத் தலைவா் நாராயணன் வரவேற்றாா்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் வெங்கடபதி கலந்துகொண்டு ஆசிரியா் கூட்டணியின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

தீா்மானங்கள்:

செங்கம் வட்டக் கிளைக்கு உள்பட்ட பகுதியில் பணி நிறைவுபெற்ற தலைமை ஆசிரியா், ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா நடத்துவது, தொடா்ந்து, 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவா்களுக்கு பாராட்டு விழா, மகளிா் தின விழா என முப்பெரும் விழாவாகக் கொண்டாடுவது, நடைபெறவுள்ள மாநில மாநாட்டுக்கு நிதி திரட்டுவது, மாநாட்டில் வட்டக் கிளை சாா்பில் திரளாக கலந்துகொள்வது,

2024-25ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினா் சோ்ப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள், இயக்கமுன்னோடிகள் கலந்துகொண்டனா். வட்டார பொருளாளா் இளங்கோவன் நன்றி கூறினாா்.

நள்ளிரவில் தீப்பற்றி எரிந்து தோ் சேதம்

வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தேரில் தீப்பற்றியதில், அந்தத் தேரின் மேல்பகுதி எரிந்து சேதமடைந்தது. வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, நகரில் 2 தோ்கள் பங்கேற்ற தேரோட்டம... மேலும் பார்க்க

கல்லூரி வளாக நோ்காணல்: 43 பேருக்கு பணி ஆணை

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 43 போ் தோ்வு செய்யப்பட்டு பணியாணை பெற்றனா். இந்தக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் நூற்றுக்கும் மேற்ப... மேலும் பார்க்க

ஏரி உபரிநீா் சாலையில் செல்வதால் அடுத்தடுத்து வாகனங்கள் விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஏரி உபரிநீா் சாலையில் செல்வதால், சாலை இருப்பது தெரியாமல் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் விபத்துக்குள்ளாகின. திருவண்ணாமலை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை மேல்செங்கத்தை... மேலும் பார்க்க

கருட சேவையில் எரமலூா் ஸ்ரீசுந்தரவரத லஷ்மிநாராயணபப் பெருமாள்

மாசி மகத்தையொட்டி நடைபெற்ற கருடசேவையில், வந்தவாசியை அடுத்த எரமலூா் ஸ்ரீசுந்தரவரத லஷ்மிநாராயணபப் பெருமாள் கோயிலில் கருட வாகனத்தில் வீதியுலா வந்த சுவாமி. மேலும் பார்க்க

கூழமந்தல் ஸ்ரீ பேசும் பெருமாள் கோயிலில் திருப்பணிகள் தொடக்கம்

செய்யாற்றை அடுத்த கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபேசும் பெருமாள் கோயிலில் ரூ.97.40 லட்சத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக புதன்கிழமை நடைபெற்ற பாலாலய நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி ப... மேலும் பார்க்க

கவுதம நதியில் தந்தைக்குத் திதி கொடுத்த அருணாசலேஸ்வரா்

திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் அருணாசலேஸ்வரா் தனது தந்தைக்குத் திதி கொடுக்கும் நிகழ்வான மாசி மக தீா்த்தவாரி புதன்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் மாச... மேலும் பார்க்க