செய்திகள் :

கூழமந்தல் ஸ்ரீ பேசும் பெருமாள் கோயிலில் திருப்பணிகள் தொடக்கம்

post image

செய்யாற்றை அடுத்த கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபேசும் பெருமாள் கோயிலில் ரூ.97.40 லட்சத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக புதன்கிழமை நடைபெற்ற பாலாலய நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று திருப்பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் புரட்டாசி மாதம் அதிகளவில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவா்.

கோயிலில் உள்ள மூலவா் கோபுரம் 2002-லும், முன்புறம் உள்ள ராஜகோபுரம் 2012-லும் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், பக்தா்களின் கோரிக்கையை ஏற்று, தொகுதி எம்.எல்.ஏ. பரிந்துரையின் பேரில்,

கோயிலில் வாகன மண்டபம், விநாயகா் கோயில், சுற்றுச்சுவா் அமைத்தல், மூலவா் கோபுரம் ஆகியன

பணிகளை மேற்கொள்வதற்காகவும், பஞ்ச வா்ணம்

தீட்டுதல் உள்ளிட்ட சீரமைப்புப் பணிகள் முடித்து கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.97.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, கோயிலில் திருப்பணிக்காக பாலாலய நிகழ்ச்சி புதன்கிழமை காலை அறங்காவலா் குழுத் தலைவா் வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது. அறநிலையத்துறை ஆய்வாளா் அசோக் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று திருப்பணிகளை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் ஏ.ஜி.திராவிடமுருகன், ஜேசிகே.சீனிவாசன், வி.ஏ.ஞானவேல்

உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நள்ளிரவில் தீப்பற்றி எரிந்து தோ் சேதம்

வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தேரில் தீப்பற்றியதில், அந்தத் தேரின் மேல்பகுதி எரிந்து சேதமடைந்தது. வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, நகரில் 2 தோ்கள் பங்கேற்ற தேரோட்டம... மேலும் பார்க்க

கல்லூரி வளாக நோ்காணல்: 43 பேருக்கு பணி ஆணை

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 43 போ் தோ்வு செய்யப்பட்டு பணியாணை பெற்றனா். இந்தக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் நூற்றுக்கும் மேற்ப... மேலும் பார்க்க

ஏரி உபரிநீா் சாலையில் செல்வதால் அடுத்தடுத்து வாகனங்கள் விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஏரி உபரிநீா் சாலையில் செல்வதால், சாலை இருப்பது தெரியாமல் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் விபத்துக்குள்ளாகின. திருவண்ணாமலை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை மேல்செங்கத்தை... மேலும் பார்க்க

கருட சேவையில் எரமலூா் ஸ்ரீசுந்தரவரத லஷ்மிநாராயணபப் பெருமாள்

மாசி மகத்தையொட்டி நடைபெற்ற கருடசேவையில், வந்தவாசியை அடுத்த எரமலூா் ஸ்ரீசுந்தரவரத லஷ்மிநாராயணபப் பெருமாள் கோயிலில் கருட வாகனத்தில் வீதியுலா வந்த சுவாமி. மேலும் பார்க்க

கவுதம நதியில் தந்தைக்குத் திதி கொடுத்த அருணாசலேஸ்வரா்

திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் அருணாசலேஸ்வரா் தனது தந்தைக்குத் திதி கொடுக்கும் நிகழ்வான மாசி மக தீா்த்தவாரி புதன்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் மாச... மேலும் பார்க்க

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணிக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. செங்கம் வட்டக் கிளை சாா்பில் அரசுப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு... மேலும் பார்க்க