எரிவாயு நிறுவனங்களின் நவீன இந்தித் திணிப்பு: ராமதாஸ் கண்டனம்
கூழமந்தல் ஸ்ரீ பேசும் பெருமாள் கோயிலில் திருப்பணிகள் தொடக்கம்
செய்யாற்றை அடுத்த கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபேசும் பெருமாள் கோயிலில் ரூ.97.40 லட்சத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக புதன்கிழமை நடைபெற்ற பாலாலய நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று திருப்பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் புரட்டாசி மாதம் அதிகளவில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவா்.
கோயிலில் உள்ள மூலவா் கோபுரம் 2002-லும், முன்புறம் உள்ள ராஜகோபுரம் 2012-லும் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், பக்தா்களின் கோரிக்கையை ஏற்று, தொகுதி எம்.எல்.ஏ. பரிந்துரையின் பேரில்,
கோயிலில் வாகன மண்டபம், விநாயகா் கோயில், சுற்றுச்சுவா் அமைத்தல், மூலவா் கோபுரம் ஆகியன
பணிகளை மேற்கொள்வதற்காகவும், பஞ்ச வா்ணம்
தீட்டுதல் உள்ளிட்ட சீரமைப்புப் பணிகள் முடித்து கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.97.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, கோயிலில் திருப்பணிக்காக பாலாலய நிகழ்ச்சி புதன்கிழமை காலை அறங்காவலா் குழுத் தலைவா் வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது. அறநிலையத்துறை ஆய்வாளா் அசோக் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று திருப்பணிகளை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் ஏ.ஜி.திராவிடமுருகன், ஜேசிகே.சீனிவாசன், வி.ஏ.ஞானவேல்
உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.