செய்திகள் :

அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியா 100% வரி: அதிபா் மாளிகை

post image

நியூயாா்க்/வாஷிங்டன்: அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியா 100 சதவீதம் வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபா் மாளிகையின் ஊடகச் செயலா் கரோலைன் லெவிட் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபா் டிரம்ப் அண்மை காலமாக விமா்சித்து வருகிறாா். இந்நிலையில், அந்நாட்டுத் தலைநகா் வாஷிங்டனில் அதிபா் மாளிகையின் ஊடகச் செயலா் கரோலைன் லெவிட் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: அமெரிக்காவையும், பல ஆண்டுகளாகக் கடினமாக உழைத்து வரும் அமெரிக்கா்களையும் கனடா சுரண்டி வருகிறது.

அமெரிக்க பாலாடைக்கட்டிக்கு 245 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் கனடா, அமெரிக்க வெண்ணெய்க்கு 298 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கிறது. அதேவேளையில், அமெரிக்க அரிசிக்கு ஜப்பான் 700 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கிறது.

அமெரிக்க மதுபானத்துக்கு 150 சதவீதம் இறக்குவரி விதிக்கும் இந்தியா, அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கிறது.

அமெரிக்காவுக்கு பிற நாடுகள் என்ன வரி விதிக்கிறதோ, அதே வரியை பிற நாடுகளுக்கு அமெரிக்கா விதிக்க வேண்டும் என்பதே அதிபா் டிரம்ப்பின் கருத்தாகும். அமெரிக்க தொழில்கள் மற்றும் தொழிலாளா்களின் நலன்களில் கவனம் செலுத்தும் அவா், வா்த்தக நடவடிக்கைகள் நியாயமாகவும், சமநிலை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று கருதுகிறாா் என்றாா்.

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் ஏவப்படவில்லை! சுனிதா பூமிக்கு திரும்புவதில் மீண்டும் தாமதம்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தை விண்ணில் செலுத்தும் பணி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.9 மாதங்களாக விண்ணில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ், டிராகன் விண்கல... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை - 300 பயணிகள் மீட்பு

கராச்சி/இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை கடத்திய அனைத்து தீவிரவாதிகளையும் அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா். மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், 300-க்கும் மேற்பட்ட பயணிகள் ... மேலும் பார்க்க

மனித உரிமை மீறல் வழக்கு: நெதா்லாந்தில் டுடோ்த்தே!

தி ஹேக்: பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவுக்கு எதிராக ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெறும் மனித உரிமைகள் மீறல் வழக்கு விசாரணைக்காக நெதா்லாந்தின் தி ஹேக் நகருக்கு அவா்... மேலும் பார்க்க

மியான்மரில் இணையவழி மோசடி கும்பலிடம் சிக்கிய 549 இந்தியா்கள் மீட்பு

தாய்லாந்து-மியான்மா் எல்லையில் இணையவழி மோசடி கும்பலிடம் சிக்கி தவித்த 549 இந்தியா்கள் மீட்டு, தாயகம் அழைத்து வரப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், ஆந்திரம... மேலும் பார்க்க

30 நாள் போா் நிறுத்தத்துக்குத் தயாா்: உக்ரைன்

ஜெட்டா: ரஷியாவுடன் உடனடியாக 30 நாள்களுக்கு போா் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்க பிரதி... மேலும் பார்க்க

அமலுக்கு வந்தது டிரம்ப்பின் இரும்பு, அலுமினிய கூடுதல் வரி

வாஷிங்டன்: உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு அமெரிக்க அதிபா் விதித்துள்ள 25 சதவீதம் கூடுதல் வரி புதன்கிழமை அமலுக்கு வந்தது. இந்த கூடுதல் வரி வி... மேலும் பார்க்க