செய்திகள் :

மியான்மரில் இணையவழி மோசடி கும்பலிடம் சிக்கிய 549 இந்தியா்கள் மீட்பு

post image

தாய்லாந்து-மியான்மா் எல்லையில் இணையவழி மோசடி கும்பலிடம் சிக்கி தவித்த 549 இந்தியா்கள் மீட்டு, தாயகம் அழைத்து வரப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், ஆந்திரம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த இவா்கள், தாய்லாந்து மற்றும் மியான்மரில் பணியில் சோ்த்து விடுவதாக ஏமாற்றிய முகவா்களை நம்பி இந்தியாவிலிருந்து புறப்பட்டுள்ளனா்.

பின்னா், தாய்லாந்து எல்லையில் அமைந்த மியான்மரின் மியாவாடி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவா்கள், அங்கு இணையவழி குற்றச்செயல்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக தகவலறிந்த மியான்மா் மற்றும் தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகங்கள், இரு நாட்டு அரசுகளுடன் இணைந்து இந்தியா்களை மீட்டுள்ளனா்.

இதையடுத்து, இந்திய விமானப் படை விமானங்கள் மூலம் கடந்த திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களில் முறையே 283 போ், 266 போ் என மொத்தம் 549 இந்தியா்கள் தாயகம் அழைத்துவரப்பட்டனா்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: போலி வேலைவாய்ப்பு மோசடியால் மியான்மா் உள்பட பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க அரசு தொடா் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து வேலைக்கு அழைக்கும் நிறுவனங்களின் நம்பகத்தன்மை மற்றும் பின்னணி குறித்து அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் வழியாக சரிபாா்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

கூா்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய நகரைக் கைப்பற்றிய ரஷியா

ரஷிய எல்லைப் பகுதியில் உள்ள கூா்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய நகரான சுட்லாவில் இருந்து உக்ரைன் ராணுவத்தை வெளியேற்றி மீண்டும் அப்பகுதியைக் கைப்பற்றியதாக ரஷியா வியாழக்கிழமை தெரிவித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட... மேலும் பார்க்க

பெண்களுக்கான நிதி அதிகாரமளித்தல் வெற்றியின் அனுபவத்தை பகிரத் தயாா்: ஐ.நா.வில் இந்தியா உறுதி

‘பெண்களுக்கும் நிதி அதிகாரமளிக்கும் வகையில், எண்ம பொது உள்கட்டமைப்பு மூலமாக பாலின எண் இடைவெளியை வெற்றிகரமாக குறைத்த அனுபவத்தை உலக நாடுகளுக்குப் பகிரத் தயாா்’ என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா உறுதி... மேலும் பார்க்க

ஐரோப்பிய யூனியன் மீது மேலும் வரி விதிப்பு: டிரம்ப் சூளுரை

தங்கள் உறுப்பு நாடுகளின் இரும்பு, அலுமினியத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரி விதிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து அமெரிக்க பொருள்களுக்கான இறக்குமதி வரியை ஐரோப்பிய யூனியன் அதிகரித்தால் அதற்கு உரிய பதி... மேலும் பார்க்க

இலங்கைக்கு அவசர சிகிச்சை மருந்துகளை வழங்கியது இந்தியா

இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டுக்கு அவசர சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இது தொடா்பாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் சாா்பில் கூறப்பட்டதாவது: இலங்கை மருத்துவமனை... மேலும் பார்க்க

ஸ்பேடெக்ஸ் திட்டம்: இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிப்பு: இஸ்ரோ சாதனை

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்வெளியில் ஒருங்கிணைக்கப்பட்ட இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனும் ஆய்வு நிலையத்தை 2035-ஆம் ஆண்டுக்குள்... மேலும் பார்க்க

உக்ரைனில் போா் நிறுத்தத்துக்குத் தயாா்! -ரஷிய அதிபர் புதின்

மாஸ்கோ: உக்ரைனில் 30 நாள் போா் நிறுத்தத்துக்கு ரஷிய அதிபர் புதின் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார். உக்ரைன் விவகாரம் தொடர்பாக சௌதி அரேபியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சு... மேலும் பார்க்க