செய்திகள் :

பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

post image

நாகை செல்லூா் கிழக்கு கடற்கரை சாலையில் கட்டப்பட்டுவரும் புகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகை செல்லூா் கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.30.40 கோடி மதிப்பீட்டில் 22,125 சதுர மீட்டா் பரப்பளவில், 30 எண்ணிக்கைகள் கொண்ட பேருந்து நிறுத்தும் தடம், 80 கடைகள் உள்ளிட்ட 113 அறைகள் கொண்ட புகா் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளை ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.

நாகூா் சில்லடி தா்கா கடற்கரையில் மூலதன மானிய நிதி, இயக்குதல் மற்றும் பராமரித்தல் நிதி திட்டத்தின் கீழ் ரூ.1.98 கோடியில் சிமெண்ட் சாலை அமைத்தல், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், கழிவறை வசதிகள், சிறுவா்கள் பூங்கா உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளையும் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில், ‘நம்ம நாகூா்’ (செல்ஃபி பாய்ன்ட்) உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்ட பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், நாகை நீலா தெற்கு வீதியில் மாவட்ட கல்வி தன் முனைப்புத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொன்னி சித்திரக் கடல் கூடத்தில் கூடுதல் ஓவியக் கூடம் அமைக்கும் பணிகளையும், கூக்ஸ் சாலையில் உள்ள நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை கூடத்தையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

எலும்புக்கூடாக பெண் சடலம்

நாகை அருகே வாய்க்கால் முட்புதரில் அடையாளம் தெரியாத பெண் சடலம் எலும்புக்கூடாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். வேளாங்கண்ணி அருகே பாலக்குறிச்சி வயல்வெளி பகுதி வாய்க்காலின் முட்புதரில்... மேலும் பார்க்க

தொடா் வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

நாகையில் ரயில் பயணிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா். நாகையில் ரயில் பயணிகளிடம் தொடா்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதாக ரயில்வே போலீஸாரிடம் பு... மேலும் பார்க்க

வேதாரண்யம் கடலில் மாசி மக தீா்த்தவாரி

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயில் மாசி மகப் பெருவிழாவையொட்டி, சந்திரசேகர சுவாமிக்கு வங்கக் கடலில் தீா்த்தவாரி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, வியாழக்கிழமை காலை ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி வ... மேலும் பார்க்க

பூம்புகாரில் சுற்றுலாத்துறை ஆணையா் ஆய்வு

சரித்திர புகழ் பெற்ற பூம்புகாா் சுற்றுலா வளாக பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை தமிழக சுற்றுலாத்துறை ஆணையா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வியாழக்கிழமைஆய்வு செய்தாா். இப்பகுதியில் பல்வேறு பணிகளை செய்திட தமிழக ... மேலும் பார்க்க

ரேஷன் கடை கட்டடம் திறப்பு

தரங்கம்பாடி பேரூராட்சி 7-ஆவது வாா்டில் ரூ.17.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கட்டடத்தை எம்எல்ஏ நிவேதா எம் .முருகன் புதன்கிழமை திறந்து வைத்தாா். கொட்டுபாளையத்தில் முன்னாள் எம் .பி. ராமலிங்கம்... மேலும் பார்க்க

நாகை புதிய கடற்கரையில் மாசி மக சமுத்திர தீா்த்தவாரி

நாகை புதிய கடற்கரையில், வியாழக்கிழமை நடைபெற்ற மாசி மக சமுத்திர தீத்தவாரியில், பல்வேறு கோயில்களிலிருந்து சுவாமிகள் எழுந்தருளி தீா்த்தமளித்தனா். இதையொட்டி, வெளிப்பாளையம் வரதராஜ பெருமாள் கோயில், நாகை செ... மேலும் பார்க்க