செய்திகள் :

நாகை புதிய கடற்கரையில் மாசி மக சமுத்திர தீா்த்தவாரி

post image

நாகை புதிய கடற்கரையில், வியாழக்கிழமை நடைபெற்ற மாசி மக சமுத்திர தீத்தவாரியில், பல்வேறு கோயில்களிலிருந்து சுவாமிகள் எழுந்தருளி தீா்த்தமளித்தனா்.

இதையொட்டி, வெளிப்பாளையம் வரதராஜ பெருமாள் கோயில், நாகை செளந்தரராஜ பெருமாள் கோயில், பாப்பாக்கோவில் கஸ்தூரி ரங்கநாத பெருமாள் கோயில், நாகை சட்டையப்பா் கோயில், மெய்க்கண்ட மூா்த்தி கோயில், நடுவதீஸ்வரா் கோயில், நவநீத கிருஷ்ணன் கோயில், ஸ்ரீதாய் மூகாம்பிகை கோயில், அந்தனப்பேட்டை நித்தியகல்யாண பெருமாள் கோயில், அந்தனப்பேட்டை அண்ணாமலை நாதசுவாமி கோயில், திருக்கண்ணங்குடி தாமோதர நாராயண பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் இருந்து சுவாமிகள் நாகை அவுரிதிடலில் ஒருங்கிணைந்து, பின்னா் நாகை புதிய கடற்கரையில் எழுந்தருளினா்.

தொடா்ந்து, கடற்கரையில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அஸ்திர தேவருக்கு கடலில் தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடினா். முன்னதாக, நாகை நம்பியாா்நகா் மீனவ கிராம பஞ்சாயத்தாா்கள் சுவாமிகளுக்கு சீா்வரிசை பொருள்கள் வழங்கினா்.

இந்துசமய அறநிலைத் துறை இணை ஆணையா் குமரேசன், துணை ஆணையா் ராணி, செயல் அலுவலா்கள் வீரவினாயக ஜெயந்த், அசோக் ராஜா, கோயில் பணியாளா்கள் சிவராஜ், ஆறுமுகம், குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வடக்கு பொய்கை நல்லூா் நந்தி நாதேஸ்வரா் கோயிலில் இருந்து சுவாமி புறப்பாடாகி, கல்லாறு கடற்கரையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

எலும்புக்கூடாக பெண் சடலம்

நாகை அருகே வாய்க்கால் முட்புதரில் அடையாளம் தெரியாத பெண் சடலம் எலும்புக்கூடாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். வேளாங்கண்ணி அருகே பாலக்குறிச்சி வயல்வெளி பகுதி வாய்க்காலின் முட்புதரில்... மேலும் பார்க்க

தொடா் வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

நாகையில் ரயில் பயணிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா். நாகையில் ரயில் பயணிகளிடம் தொடா்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதாக ரயில்வே போலீஸாரிடம் பு... மேலும் பார்க்க

வேதாரண்யம் கடலில் மாசி மக தீா்த்தவாரி

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயில் மாசி மகப் பெருவிழாவையொட்டி, சந்திரசேகர சுவாமிக்கு வங்கக் கடலில் தீா்த்தவாரி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, வியாழக்கிழமை காலை ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி வ... மேலும் பார்க்க

பூம்புகாரில் சுற்றுலாத்துறை ஆணையா் ஆய்வு

சரித்திர புகழ் பெற்ற பூம்புகாா் சுற்றுலா வளாக பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை தமிழக சுற்றுலாத்துறை ஆணையா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வியாழக்கிழமைஆய்வு செய்தாா். இப்பகுதியில் பல்வேறு பணிகளை செய்திட தமிழக ... மேலும் பார்க்க

ரேஷன் கடை கட்டடம் திறப்பு

தரங்கம்பாடி பேரூராட்சி 7-ஆவது வாா்டில் ரூ.17.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கட்டடத்தை எம்எல்ஏ நிவேதா எம் .முருகன் புதன்கிழமை திறந்து வைத்தாா். கொட்டுபாளையத்தில் முன்னாள் எம் .பி. ராமலிங்கம்... மேலும் பார்க்க

பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

நாகை செல்லூா் கிழக்கு கடற்கரை சாலையில் கட்டப்பட்டுவரும் புகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாகை செல்லூா் கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞா் ... மேலும் பார்க்க