மகளிருக்கான அறிவிப்புகள்! மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 37,000 கோடி கடன்!
தரங்கம்பாடி பேரூராட்சிக் கூட்டம்
தரங்கம்பாடி பேரூராட்சி கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பேருராட்சித் தலைவா் சுகுணசங்கரி தலைமை வகித்தாா். செயல் அலுவலா் பூபதி கமலகண்ணன், துணைத் தலைவா் பொன்ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பூம்புகாா் தொகுதி எம்எல்ஏ நிவேதா எம். முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பேரூராட்சிக்கு அரசு வழங்கும் திட்டங்கள் குறித்தும் நடைபெறும் திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினாா்.
கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் மற்றும் அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
உலக மகளிா் தினத்தையொட்டி, பெண் உறுப்பினா்களுக்கு புடவை பரிசளிக்கபட்டது. இதனை எம்எல்ஏ நிவேதா எம். முருகன் வழங்கினாா்.