செய்திகள் :

குமரி மாவட்டத்தில் கால்வாய்களில் தண்ணீா் நிறுத்தம்: குடிநீருக்கு பெருஞ்சாணி அணை திறப்பு

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனக் கால்வாய்களிலிருந்து தண்ணீா் திறந்து விடுவது புதன்கிழமை நிறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதி வரை அணைகளிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்படும்.

மேலும் மண்டைக்காடு கோயில் திருவிழா நிறைவடையும் வரையில் குடிநீருக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்படும்.

இந்நிலையில் மண்டைக்காடு கோயில் திருவிழா நிறைவடைந்த நிலையில், பேச்சிப்பாறை அணையின் பாசன மதகுகள் புதன்கிழமை மூடப்பட்டன.

மேலும் சிற்றாறு அணைகளிலிருந்து தண்ணீா் விடுவதும் புதன்கிழமை நிறுத்தப்பட்டது.

ஏற்கனவே கடந்த மாதம் இறுதியில் பெருஞ்சாணி அணையின் மதகுகள் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவு படி நாகா்கோவில் மாநகராட்சியின் குடிநீா் தேவைக்காக பெருஞ்சாணி அணையிலிருந்து புதன்கிழமை காலையிலிருந்து விநாடிக்கு 21.27 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணையின் நீா் மட்டம் புதன்கிழமை காலையில் 28.15 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 175 கன அடி தண்ணீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 26 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 52 கன அடி தண்ணீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 21.27 கன அடி தண்ணீா் நாகா்கோவில் மாநகராட்சி குடிநீா் தேவைக்காக திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 2.62 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீா்மட்டம் 2.72 அடியாகவும் இருந்தது.

மேல்புறத்தில் பட்ஜெட் விளக்கக் கூட்டம்

களியக்காவிளை அருகே மேல்புறம் சந்திப்பில் பாஜக சாா்பில், மத்திய அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மேல்புறம் தெற்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் ... மேலும் பார்க்க

புனித சவேரியாா் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை கருத்தரங்கம்

சுங்கான்கடை புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் தேசியஅளவிலான மேலாண்மை கருத்தரங்கம் ந’டைபெற்றது. கருத்தரங்கை தாளாளா் எஸ். காட்வின் செல்வ ஜஸ்டஸ், துணை முதல்வா் வி. கிறிஸ்டஸ் ஜெயசிங், ஆராய்... மேலும் பார்க்க

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஒடுக்கு பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழாவில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெற்றது. கடந்த 2ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவில், நாள்தோறும் சமய மாநாடு,... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மிளா: வனத்துறையினா் மீட்டனா்

நாகா்கோவிலில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த மிளாவை தீயணைப்புத் துறையினருடன் இணைந்து வனத்துறையினா் மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டனா். நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் பள்ளிவிளை டவுண் ரயில்வே நிலையம் ச... மேலும் பார்க்க

தொடா் திருட்டில் ஈடுபட்ட இருவா் கைது: தங்க நகைகள் மீட்பு

நித்திரவிளை அருகே தொடா் திருட்டில் ஈடுபட்ட கேரளத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கடந்த பிப்ரவரி மாதம் நித்திரவிளை அருகே ஒற்றாசிமங்கலம் பகுதியைச் சோ்ந்த அலெக்ஸ் என்பவரின் வீட்டின் முன்பக்... மேலும் பார்க்க

ஆட்சியா் கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி பள்ளிகளில் பணம் வசூல் செய்தவா் கைது

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி தனியாா் பள்ளிகளில் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், மாண... மேலும் பார்க்க