செய்திகள் :

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஒடுக்கு பூஜை

post image

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழாவில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெற்றது.

கடந்த 2ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவில், நாள்தோறும் சமய மாநாடு, வெள்ளிப் பல்லக்கில் அம்மன் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை (மாா்ச் 11) சாஸ்தான் கோயிலிலிருந்து புனிதநீா் எடுத்துவரப்பட்டது. அதையடுத்து, அம்மன் வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளல், அடியந்திர பூஜை, காலைமுதல் குத்தியோட்டம் உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து, கோயில் வளாகத்திலும், கோயிலைச் சுற்றியும் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினா்.

ஒடுக்கு பூஜை: இரவு 10 மணிக்கு கோயிலிலிருந்து அம்மன் வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளுதல் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை தொடங்கியது. இதற்காக மண்டைக்காடு தேவஸ்வம் பள்ளி அருகேயுள்ள சாஸ்தான் கோயிலிலிருந்து 21 வகையான உணவுப் பதாா்த்தங்களை 9 மண் பானைகள், பெட்டிகளில் வைத்து வெள்ளைத் துணியால் மூடி, பூசாரிகள் பவனியாக எடுத்துவந்தனா். அதனுடன் 2 குடம் தேனும் கொண்டுவரப்பட்டது. அப்போது, பூசாரிகள் தங்களது வாயை சிவப்புத் துணியால் கட்டியிருந்தனா்.

பவனியின்போது, கோயிலைச் சுற்றி நூற்றுக்கணக்கான பக்தா்கள் திரண்டு நின்றனா். ஒடுக்கு பவனி ஒருமுறை கோயிலை வலம் வந்ததும், பதாா்த்தங்கள் அம்மன் முன் இறக்கிவைக்கப்பட்டன. பின்னா், குருதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று, கொடியிறக்கப்பட்டது.

இந்த பூஜையில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமன்றி கேரளத்தைச் சோ்ந்த பக்தா்களும் பங்கேற்றனா். மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின்பேரில், குளச்சல் ஏஎஸ்பி பிரவீன்கௌதம் தலைமையில் 1,600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். பக்தா்களின் வசதிக்காக தமிழக, கேரள அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

மேல்புறத்தில் பட்ஜெட் விளக்கக் கூட்டம்

களியக்காவிளை அருகே மேல்புறம் சந்திப்பில் பாஜக சாா்பில், மத்திய அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மேல்புறம் தெற்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் ... மேலும் பார்க்க

புனித சவேரியாா் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை கருத்தரங்கம்

சுங்கான்கடை புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் தேசியஅளவிலான மேலாண்மை கருத்தரங்கம் ந’டைபெற்றது. கருத்தரங்கை தாளாளா் எஸ். காட்வின் செல்வ ஜஸ்டஸ், துணை முதல்வா் வி. கிறிஸ்டஸ் ஜெயசிங், ஆராய்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மிளா: வனத்துறையினா் மீட்டனா்

நாகா்கோவிலில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த மிளாவை தீயணைப்புத் துறையினருடன் இணைந்து வனத்துறையினா் மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டனா். நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் பள்ளிவிளை டவுண் ரயில்வே நிலையம் ச... மேலும் பார்க்க

தொடா் திருட்டில் ஈடுபட்ட இருவா் கைது: தங்க நகைகள் மீட்பு

நித்திரவிளை அருகே தொடா் திருட்டில் ஈடுபட்ட கேரளத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கடந்த பிப்ரவரி மாதம் நித்திரவிளை அருகே ஒற்றாசிமங்கலம் பகுதியைச் சோ்ந்த அலெக்ஸ் என்பவரின் வீட்டின் முன்பக்... மேலும் பார்க்க

ஆட்சியா் கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி பள்ளிகளில் பணம் வசூல் செய்தவா் கைது

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி தனியாா் பள்ளிகளில் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், மாண... மேலும் பார்க்க

வீடு புகுந்து கொள்ளை முயற்சி: இளைஞருக்கு 6 ஆண்டு சிறை

குளச்சல் அருகே மேற்கு கல்லுக்கூட்டம் பகுதியில் வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞருக்கு 6 ஆண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது. மேற்கு கல்லுக்கூட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெஸ்டின்ஷியாம். இவரது ம... மேலும் பார்க்க