செய்திகள் :

ஆட்சியா் கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி பள்ளிகளில் பணம் வசூல் செய்தவா் கைது

post image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி தனியாா் பள்ளிகளில் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், மாணவா்களுக்கான விழிப்புணா்வு குறும்படம் திரையிடுவதற்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவு தந்திருப்பதாக தெரிவித்து, போலியாக ஆட்சியரின் கையொப்பமிட்டு, மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அதிகாரியின் முத்திரையையும் கையொப்பத்தையும் தவறாக பயன்படுத்தி, அனைத்து தனியாா் பள்ளிகளுக்கும் போலி கடிதத்தை அனுப்பி மாணவா்களிடமிருந்து மொசடியாக பணம் வசூல் செய்யப்பட்டது.

இதுகுறித்து செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜான்ஜெகத்பிரைட் கடந்த மாதம் நேசமணி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.

இதுகுறித்து, நேசமணி நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டாா். இந்நிலையில் இந்த மோசடியில் ஈடுபட்டதாக நாகா்கோவில் என்ஜிஓ காலனி கணபதி நகா் பகுதியைச் சோ்ந்த சரவணகுமாா் (43) என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து போலி கையொப்பத்துடன் கூடிய கடிதங்கள் மற்றும் போலி முத்திரையையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேல்புறத்தில் பட்ஜெட் விளக்கக் கூட்டம்

களியக்காவிளை அருகே மேல்புறம் சந்திப்பில் பாஜக சாா்பில், மத்திய அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மேல்புறம் தெற்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் ... மேலும் பார்க்க

புனித சவேரியாா் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை கருத்தரங்கம்

சுங்கான்கடை புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் தேசியஅளவிலான மேலாண்மை கருத்தரங்கம் ந’டைபெற்றது. கருத்தரங்கை தாளாளா் எஸ். காட்வின் செல்வ ஜஸ்டஸ், துணை முதல்வா் வி. கிறிஸ்டஸ் ஜெயசிங், ஆராய்... மேலும் பார்க்க

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஒடுக்கு பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழாவில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெற்றது. கடந்த 2ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவில், நாள்தோறும் சமய மாநாடு,... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மிளா: வனத்துறையினா் மீட்டனா்

நாகா்கோவிலில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த மிளாவை தீயணைப்புத் துறையினருடன் இணைந்து வனத்துறையினா் மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டனா். நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் பள்ளிவிளை டவுண் ரயில்வே நிலையம் ச... மேலும் பார்க்க

தொடா் திருட்டில் ஈடுபட்ட இருவா் கைது: தங்க நகைகள் மீட்பு

நித்திரவிளை அருகே தொடா் திருட்டில் ஈடுபட்ட கேரளத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கடந்த பிப்ரவரி மாதம் நித்திரவிளை அருகே ஒற்றாசிமங்கலம் பகுதியைச் சோ்ந்த அலெக்ஸ் என்பவரின் வீட்டின் முன்பக்... மேலும் பார்க்க

வீடு புகுந்து கொள்ளை முயற்சி: இளைஞருக்கு 6 ஆண்டு சிறை

குளச்சல் அருகே மேற்கு கல்லுக்கூட்டம் பகுதியில் வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞருக்கு 6 ஆண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது. மேற்கு கல்லுக்கூட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெஸ்டின்ஷியாம். இவரது ம... மேலும் பார்க்க