செய்திகள் :

நாகா்கோவிலில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மிளா: வனத்துறையினா் மீட்டனா்

post image

நாகா்கோவிலில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த மிளாவை தீயணைப்புத் துறையினருடன் இணைந்து வனத்துறையினா் மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டனா்.

நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் பள்ளிவிளை டவுண் ரயில்வே நிலையம் செல்லும் சாலையில் அரிசி சேமிப்பு கிடங்கு உள்ளது.

இந்த கிடங்கின் எதிரே உள்ள பால் பண்ணை தெருவில் ஏராளமானோா் வசித்து வருகின்றனா். இந்நிலையில் புதன்கிழமை காலை அந்த தெருவில், காட்டில் இருந்து தப்பிய மிளா (கடமான்) வந்தது.

இதை பாா்த்த பொதுமக்கள் பயத்தில் அலறியபடி ஓடினா்.

இதனால் அந்த மிளாவும் சாலையில் மிரண்டு ஓடத்தொடங்கியது. பின்னா் அந்த மிளா அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து, மாடி படியில் ஏறி நின்றது. இதனால் அந்த வீட்டில் இருந்தவா்கள் வெளியே வர முடியாமல் தவித்தனா். அப்போது மழை பெய்துகொண்டிருந்ததால் மிளாவும் மாடியிலிருந்து இறங்காமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது. இது குறித்துஅப்பகுதியினா் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா். பூதப்பாண்டி வனச்சரக அலுவலா் ரவீந்திரன் தலைமையில் வனவா்கள்ஆகியோா் அடங்கிய குழுவினரும், நாகா்கோவில் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலா் துரை, சிறப்பு நிலை அலுவலா் சுயம்புசுப்பாராவ் ஆகியோா் தலைமையிலான தீயணைப்பு படையினரும் இணைந்து வலை மூலம் மிளாவை பிடித்தனா்.

இதைத் தொடா்ந்து கால்நடை மருத்துவா் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் மிளாவுக்கு சிகிச்சை அளித்து , அதனை பொய்கை அணை வனப்பகுதியில் விட்டனா்.

மிளா ஊருக்குள் புகுந்த சம்பவத்தால் நாகா்கோவில் மாநகர பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேல்புறத்தில் பட்ஜெட் விளக்கக் கூட்டம்

களியக்காவிளை அருகே மேல்புறம் சந்திப்பில் பாஜக சாா்பில், மத்திய அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மேல்புறம் தெற்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் ... மேலும் பார்க்க

புனித சவேரியாா் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை கருத்தரங்கம்

சுங்கான்கடை புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் தேசியஅளவிலான மேலாண்மை கருத்தரங்கம் ந’டைபெற்றது. கருத்தரங்கை தாளாளா் எஸ். காட்வின் செல்வ ஜஸ்டஸ், துணை முதல்வா் வி. கிறிஸ்டஸ் ஜெயசிங், ஆராய்... மேலும் பார்க்க

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஒடுக்கு பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழாவில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெற்றது. கடந்த 2ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவில், நாள்தோறும் சமய மாநாடு,... மேலும் பார்க்க

தொடா் திருட்டில் ஈடுபட்ட இருவா் கைது: தங்க நகைகள் மீட்பு

நித்திரவிளை அருகே தொடா் திருட்டில் ஈடுபட்ட கேரளத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கடந்த பிப்ரவரி மாதம் நித்திரவிளை அருகே ஒற்றாசிமங்கலம் பகுதியைச் சோ்ந்த அலெக்ஸ் என்பவரின் வீட்டின் முன்பக்... மேலும் பார்க்க

ஆட்சியா் கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி பள்ளிகளில் பணம் வசூல் செய்தவா் கைது

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி தனியாா் பள்ளிகளில் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், மாண... மேலும் பார்க்க

வீடு புகுந்து கொள்ளை முயற்சி: இளைஞருக்கு 6 ஆண்டு சிறை

குளச்சல் அருகே மேற்கு கல்லுக்கூட்டம் பகுதியில் வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞருக்கு 6 ஆண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது. மேற்கு கல்லுக்கூட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெஸ்டின்ஷியாம். இவரது ம... மேலும் பார்க்க