செய்திகள் :

இந்தியா வருகிறாா் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ்

post image

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் இம்மாத இறுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு பிரதமா் நரேந்திர மோடி கடந்த மாதம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டாா். இந்நிலையில், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியா்கள் கை, கால்களில் விலங்கு பூட்டி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனா். இது இந்தியாவில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா அதிகம் வரி விதிப்பதை அதிபா் டிரம்ப் தொடா்ந்து விமா்சித்து வருகிறாா். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருள்கள் மீதான வரியையும் டிரம்ப் அதிகரித்துள்ளாா்.

இந்தச் சூழ்நிலையில் துணை அதிபா் ஜே.டிவான்ஸ் இந்தியாவுக்கு பயணிப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா். அவரின் பெற்றோா் 1970-ஆம் ஆண்டுகளின் இறுதியில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயா்ந்தாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் பதவியேற்ற பிறகு பிரான்ஸ், ஜொ்மனிக்கு முதல் பயணம் மேற்கொண்டாா். அதன்பிறகு இந்தியாவுக்குதான் வருகிறாா்.

அண்மையில் உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது அதிபா் டிரம்பைவிட துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் பேசியதுதான் ஊடகங்களில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் முந்தைய துணை அதிபா்கள் போல அல்லாமல், அமெரிக்க அரசில் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் வான்ஸ் தன்னை நிலைநிறுத்தியுள்ளாா்.

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் ஏவப்படவில்லை! சுனிதா பூமிக்கு திரும்புவதில் மீண்டும் தாமதம்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தை விண்ணில் செலுத்தும் பணி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.9 மாதங்களாக விண்ணில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ், டிராகன் விண்கல... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை - 300 பயணிகள் மீட்பு

கராச்சி/இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை கடத்திய அனைத்து தீவிரவாதிகளையும் அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா். மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், 300-க்கும் மேற்பட்ட பயணிகள் ... மேலும் பார்க்க

மனித உரிமை மீறல் வழக்கு: நெதா்லாந்தில் டுடோ்த்தே!

தி ஹேக்: பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவுக்கு எதிராக ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெறும் மனித உரிமைகள் மீறல் வழக்கு விசாரணைக்காக நெதா்லாந்தின் தி ஹேக் நகருக்கு அவா்... மேலும் பார்க்க

மியான்மரில் இணையவழி மோசடி கும்பலிடம் சிக்கிய 549 இந்தியா்கள் மீட்பு

தாய்லாந்து-மியான்மா் எல்லையில் இணையவழி மோசடி கும்பலிடம் சிக்கி தவித்த 549 இந்தியா்கள் மீட்டு, தாயகம் அழைத்து வரப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், ஆந்திரம... மேலும் பார்க்க

30 நாள் போா் நிறுத்தத்துக்குத் தயாா்: உக்ரைன்

ஜெட்டா: ரஷியாவுடன் உடனடியாக 30 நாள்களுக்கு போா் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்க பிரதி... மேலும் பார்க்க

அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியா 100% வரி: அதிபா் மாளிகை

நியூயாா்க்/வாஷிங்டன்: அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியா 100 சதவீதம் வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபா் மாளிகையின் ஊடகச் செயலா் கரோலைன் லெவிட் தெரிவித்துள்ளாா். அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா அதிக வரி... மேலும் பார்க்க