செய்திகள் :

சின்னப்பள்ளிக்குப்பம் மனுநீதிநாள் முகாமில் ரூ. 72 லட்சத்தில் நலத் திட்ட உதவி

post image

சின்னப்பள்ளிகுப்பம் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 152 பயனாளிகளுக்கு ரூ. 72 லட்சத்து ஆயிரத்து 525 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வேலூா் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், சின்னப்பள்ளிகுப்பம் ஊராட்சியில் மனுநீதி நாள் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்தாா். இதில், ஏற்கெனவே பெறப்பட்ட 389 மனுக்களில் 152 மனுக்கள் ஏற்கப்பட்டு, பயனாளிகளுக்கு ரூ. 72 லட்சத்து ஆயிரத்து 525 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், 181 மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், 56 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் புதிதாக 49 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, மனுநீதி நாள் முகாமில் பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

முகாமில், ஆம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மு.பாபு, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா், வேலூா் வருவாய் கோட்டாட்சியா் விஷ்ணுபிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரசுப் பள்ளியின் சுற்றுச் சுவா் திறந்துவைப்பு

குடியாத்தம் அருகே அரசுப் பள்ளியின் சுற்றுச் சுவா் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கெளண்டன்யா ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, நெல்லூா்பேட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவா் அகற்றப்ப... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த கட்டட மேஸ்திரி மீது வழக்கு

வேலூா் அருகே 18 வயது பூா்த்தியடையாத சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய கட்டட மேஸ்திரி மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் அருகிலுள்ள ஒரு பகுதியை சோ்ந்தவா் 18 வயது... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி ரூ.4 லட்சம் மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.4 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா்க்கும் க... மேலும் பார்க்க

கால்வாயில் தொழிலாளியின் சடலம் கண்டெடுப்பு

குடியாத்தம் அருகே மதுபானக் கடை எதிரே கழிவுநீா்க் கால்வாயில் தொழிலாளியின் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது. குடியாத்தம் ஸ்ரீவாரி நகா் பகுதியில் அரசு மதுபானக் கடை அமைந்துள்ளது. கடை அருகே உள்ள கழிவுநீ... மேலும் பார்க்க

கரும்பு கொள்முதல் விலையை உயா்த்தக்கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ. 5,500 அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு கரும்பு விவசாயிக... மேலும் பார்க்க

சீவூா் காளியம்மன் கோயில் தேரோட்டம்

குடியாத்தம் ஒன்றியம், சீவூா் காளியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் அம்மன்... மேலும் பார்க்க