செய்திகள் :

Kharge: மாநிலங்களவையில் மன்னிப்பு கேட்ட கார்கே.. விரக்தியில் போட்ட பதிவு!

post image

'தேசிய கல்வி கொள்கை' - தற்போதைய மக்களவை, மாநிலங்களவையின் ஹாட் டாப்பிக்.

கடந்த திங்கட்கிழமையில் இருந்து நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. தேசிய கல்வி கொள்கை திட்டம், இந்தி திணிப்பு எதிர்ப்பு என ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றம் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில், மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு அரசை 'நாகரிகமல்லாதவர்கள்' என்று குறிப்பிட்டதை விமர்சித்து மாநிலங்களவையில் மத்திய எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். அப்போது அவர் "இது சர்வாதிகாரத்தனம். எதிர்க்கட்சிகள் அரசை விமர்ச்சிக்க தயாராக உள்ளோம்" என்று கூறினார்.

"பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் இப்படி பேசுவது கடும் கண்டனத்திற்குரியது" என்று மத்திய அமைச்சர் ஜெ.பி நட்டா எதிர்ப்பு தெரிவித்தார். அவரை தொடர்ந்து மாநிலங்களவையின் துணை சபாநாயகர் ஹரிவன்ஷும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனையடுத்து கார்கே, "நான் உங்களை குறித்து பேசவில்லை. அரசின் கொள்கையை எதிர்த்து தான் பேசினேன். நான் பேசியது கடுமையாக இருந்தால், மன்னித்துவிடுங்கள்" என்று மன்னிப்பு கேட்டார்.

இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கார்கே, "நாட்டின் ஒரு பகுதியின் சுயமரியாதையையும், ஒரு பகுதி மக்களையும் பண்பாடற்றவர்கள் மற்றும் நாகரிகமற்றவர்கள் என்று கூறினால், நீங்கள் அந்த அமைச்சரை பதவி விலக சொல்ல வேண்டும். மோடி அரசு நாட்டை பிரிப்பது குறித்தும், உடைப்பது குறித்தும் பேசுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Kerala CM: கவர்னருடன் டெல்லி சென்று கேரளாவுக்கு நிதி கேட்ட பினராயி விஜயன்... வியக்க வைத்த நிகழ்வு!

கேரள முதல்வர் - கவர்னர் நட்பு: கேரள கவர்னராக இருந்த ஆரிப் முஹம்மதுகான் முதல்வர் பினராயி விஜயனுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் 5 ஆண்டுகளாக கவர்னராக இருந்த நிலையில் பஞ்சாப் கவர்னராக நியமிக... மேலும் பார்க்க

NEP: ``உண்மைகளைத் திரிப்பதை நிறுத்துங்கள்'' - தர்மேந்திர பிரதானை சாடிய கனிமொழி

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக திமுகவிற்கும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிற்கும் மோதல் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. நேற்று (மார்ச் 12) தர்மேந்திர பிரதான் பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு ஏற்றுக்கொண்டதாக த... மேலும் பார்க்க

Nilgiris: ``பலா மரங்களை தேடி வரும் யானைகளுக்கு என்ன பதில் சொல்வோம்..'' -வேதனையில் பழங்குடிகள்

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலம் என்றாலும் மரங்களை வெட்டுவதற்கு தடைகளும் கட்டுப்பாடுகளும் நடைமுறையில் உள்ளன. குடியிருப்பு அல்லது சாலையில் விழும் நிலையில் ... மேலும் பார்க்க

Pakistan: ரயிலைக் கடத்திய பலூச்சிகள் யார்? அவர்களுக்கு இருக்கும் திராவிட தொடர்பு என்ன?

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை பலூச் விடுதலை படை (BLA) என்ற தீவிரவாத அமைப்பு நேற்று சிறைபிடித்தது. ரயில் ஓட்டுநர் காயமடைந்த நிலையில், அதில் பயணம் செய்த 30 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளது. 500... மேலும் பார்க்க

Health: பேரு தான் சின்ன வெங்காயம்... பலன்கள் அப்பப்பா..!

தினமும் சாப்பிடவேண்டிய காய்கறிகளில் சின்ன வெங்காயத்துக்குத்தான் முதல் இடம். ஆனால், உரிக்க சோம்பல்பட்டு பலரும் பெரிய வெங்காயத்தையே நாடுகின்றனர். உணவில் ருசியைக் கூட்டி, வாசனையைச் சேர்க்கும் சின்ன வெங்க... மேலும் பார்க்க

``பிரதான் திமிராக பேசுகிறார், பிளாக்மெயில் செய்கிறார், ஆனால்.." - முதல்வர் ஸ்டாலின் சொல்வதென்ன?

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1285 கோடியிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி இருக்கிறார். அடிக்கல் நாட்டு விழாவில் தேசிய கல்வி கொள்கைக் குறித்தும் தர்மேந்திர பிரதான் கு... மேலும் பார்க்க