செய்திகள் :

Kerala CM: கவர்னருடன் டெல்லி சென்று கேரளாவுக்கு நிதி கேட்ட பினராயி விஜயன்... வியக்க வைத்த நிகழ்வு!

post image

கேரள முதல்வர் - கவர்னர் நட்பு:

கேரள கவர்னராக இருந்த ஆரிப் முஹம்மதுகான் முதல்வர் பினராயி விஜயனுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் 5 ஆண்டுகளாக கவர்னராக இருந்த நிலையில் பஞ்சாப் கவர்னராக நியமிக்கப்பட்டார். பஞ்சாப் கவர்னராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரள கவர்னராக நியமிக்கப்பட்டார். புதிய கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் முதல்வர் பினராயி விஜயனும் அதீத நட்பு பாராட்டி வருகின்றனர்.

கேரள கவர்னராக பதவி ஏற்க கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கேரளா வந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை திருவனந்தபுரம் விமானநிலையம் வரைச் சென்று வரவேற்றார் பினராயி விஜயன். கவர்னர் பதவி ஏற்றபின் தனது மனைவியுடன் ராஜ்பவனுக்குச் சென்று அவரை சந்தித்தார் பினராயி விஜயன். குடியரசுதின விழாவின்போது ராஜ்பவனில் நடைபெற்ற தேனீர் விருந்தில் முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டு கவர்னரிடம் அன்பை பரிமாறிக் கொண்டார்.

அதுபோன்று கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் முதல்வர் பினராயி விஜயனிடம் தோழமை பாராட்டி வருகிறார். ஏற்கெனவே நடந்த சட்டசபை கூட்டத்தில் கேரள அரசு தயாரித்துகொடுத்த உரையில் ஒரு வார்த்தைகூட விடாமல் வாசித்தார் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். மத்திய அரசு கேரளாவுக்கு நிதி ஒதுக்காமல், பாகுபாடு காட்டுவதாக அந்த உரையில் இடம்பெற்ற வரிகளையும் வாசித்தார் கவர்னர்.

முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்த கவர்னர், "நான் கல்லூரி படிக்கும் காலத்திலேயே பார்க்க வேண்டும் என விரும்பிய தலைவர் அச்சுதானந்தன்' என சிலாகித்தார்.

பால பருவத்தில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் செயல்பட்டுவரும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் முதல்வர் பினராயி விஜயன் நெருக்கமாக நட்பு பாராட்டிவருவது அரசியலில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருந்தது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் சந்திப்பு

எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் குடைச்சல் கொடுத்துவரும் நிலையில், கேரளா மாநிலத்துக்கான நிதிகளை வழங்க வேண்டும் என டெல்லியில் உள்ள கேரளா ஹவுசில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் சென்று சந்தித்துள்ளார் முதல்வர் பினராயி விஜயன். இன்று காலை நடந்த இந்த சந்திப்பின்போது கேரள அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி கே.வி.தாமஸ் உடன் இருந்தார்.

கவர்னருடன் சென்று மத்திய நிதி அமைச்சரை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரளா ஹவுசுக்கு வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் கேரள அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி கே.வி.தாமஸ் ஆகிய மூவரும் இணைந்து வரவேற்றனர். டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்கும் முதல்வர்களுடன் கவர்னர்கள் செல்வது ஆச்சர்யமாக நிகழ்வாக இருக்கும். அதிலும் எதிர்கட்சி ஆளும் கேரளாவில் முதல்வரும், கவர்னரும் இணைந்து மத்திய நிதி அமைச்சரை சந்தித்து நிதி கேட்டிருப்பது அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

Kharge: மாநிலங்களவையில் மன்னிப்பு கேட்ட கார்கே.. விரக்தியில் போட்ட பதிவு!

'தேசிய கல்வி கொள்கை' - தற்போதைய மக்களவை, மாநிலங்களவையின் ஹாட் டாப்பிக். கடந்த திங்கட்கிழமையில் இருந்து நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. தேசிய கல்வி கொள்கை திட்டம், இந்தி திணிப்பு எதிர்ப்ப... மேலும் பார்க்க

NEP: ``உண்மைகளைத் திரிப்பதை நிறுத்துங்கள்'' - தர்மேந்திர பிரதானை சாடிய கனிமொழி

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக திமுகவிற்கும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிற்கும் மோதல் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. நேற்று (மார்ச் 12) தர்மேந்திர பிரதான் பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு ஏற்றுக்கொண்டதாக த... மேலும் பார்க்க

Nilgiris: ``பலா மரங்களை தேடி வரும் யானைகளுக்கு என்ன பதில் சொல்வோம்..'' -வேதனையில் பழங்குடிகள்

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலம் என்றாலும் மரங்களை வெட்டுவதற்கு தடைகளும் கட்டுப்பாடுகளும் நடைமுறையில் உள்ளன. குடியிருப்பு அல்லது சாலையில் விழும் நிலையில் ... மேலும் பார்க்க

Pakistan: ரயிலைக் கடத்திய பலூச்சிகள் யார்? அவர்களுக்கு இருக்கும் திராவிட தொடர்பு என்ன?

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை பலூச் விடுதலை படை (BLA) என்ற தீவிரவாத அமைப்பு நேற்று சிறைபிடித்தது. ரயில் ஓட்டுநர் காயமடைந்த நிலையில், அதில் பயணம் செய்த 30 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளது. 500... மேலும் பார்க்க

Health: பேரு தான் சின்ன வெங்காயம்... பலன்கள் அப்பப்பா..!

தினமும் சாப்பிடவேண்டிய காய்கறிகளில் சின்ன வெங்காயத்துக்குத்தான் முதல் இடம். ஆனால், உரிக்க சோம்பல்பட்டு பலரும் பெரிய வெங்காயத்தையே நாடுகின்றனர். உணவில் ருசியைக் கூட்டி, வாசனையைச் சேர்க்கும் சின்ன வெங்க... மேலும் பார்க்க

``பிரதான் திமிராக பேசுகிறார், பிளாக்மெயில் செய்கிறார், ஆனால்.." - முதல்வர் ஸ்டாலின் சொல்வதென்ன?

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1285 கோடியிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி இருக்கிறார். அடிக்கல் நாட்டு விழாவில் தேசிய கல்வி கொள்கைக் குறித்தும் தர்மேந்திர பிரதான் கு... மேலும் பார்க்க